RBI Explains.. ரூபாய் நோட்டில் இந்த குறியீடு இருந்தால் கள்ள நோட்டா?

Jul 28, 2023,09:39 AM IST

டெல்லி : ரூபாய் நோட்டுக்களின் சீரியல் நம்பர்களில் ( * ) குறியீடு இருந்தால் அது கள்ளநோட்டு என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி, பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

( * ) குறியீட்டுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள். இந்த நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்ப துவங்கி விட்டனர். இதனையடுத்து ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த குறியீடு வெறும் நம்பர் பேனல் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இது கள்ளநோட்டு கிடையாது. 



பழுதடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு, புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் மக்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டு வருகிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட100 தாள்கள் கொண்ட ரூபாய் கட்டில் ( * ) குறியீடு இருந்தால் அவை புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என்று அர்த்தம். அதனால்  ( * )  குறியீட்டுடன் இருக்கும் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்று தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது செல்லத்தக்கது தான். 

மற்ற ரூபாய் நோட்டுக்களில் எப்படி சீரியல் நம்பர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் தான் புதிய நோட்டுக்களில் எண்களுக்கு பதிலாக ஸ்டார் சிம்பல்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீடு இருந்தால் அது புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என அடையாளம் கண்டு கொள்ளலாம். 

ரூ,2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாலிமென்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றன. கருப்பு பணத்தை  ஒழிக்கிறேன் என்ற பெயரில் உயர் பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்று வருகிறீர்கள். ரூ.2000, ரூ.1000 நோட்டுக்களை திரும்பப் பெற்று விட்டீர்கள். அடுத்து உயர் பண மதிப்பு கொண்டது ரூ.500 தான். அதையும் திரும்ப பெறும் அரசுக்கு உள்ளதா? கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்