RBI Explains.. ரூபாய் நோட்டில் இந்த குறியீடு இருந்தால் கள்ள நோட்டா?

Jul 28, 2023,09:39 AM IST

டெல்லி : ரூபாய் நோட்டுக்களின் சீரியல் நம்பர்களில் ( * ) குறியீடு இருந்தால் அது கள்ளநோட்டு என்ற தகவல் கடந்த சில நாட்களாக பரவி, பரபரப்பை கிளப்பி உள்ளது. இதனால் இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

( * ) குறியீட்டுடன் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள். இந்த நோட்டுக்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக கடந்த சில நாட்களாக ஒரு தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது. இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்ப துவங்கி விட்டனர். இதனையடுத்து ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த குறியீடு வெறும் நம்பர் பேனல் அடிப்படையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி இது கள்ளநோட்டு கிடையாது. 



பழுதடைந்த ரூபாய் நோட்டுக்கள் மாற்றப்பட்டு, புதிய நோட்டுக்கள் புழக்கத்தில் மக்கள் பயன்படுத்த வெளியிடப்பட்டு வருகிறது. புதிதாக அச்சடிக்கப்பட்ட100 தாள்கள் கொண்ட ரூபாய் கட்டில் ( * ) குறியீடு இருந்தால் அவை புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என்று அர்த்தம். அதனால்  ( * )  குறியீட்டுடன் இருக்கும் நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்று தகவலை யாரும் நம்ப வேண்டாம். இது செல்லத்தக்கது தான். 

மற்ற ரூபாய் நோட்டுக்களில் எப்படி சீரியல் நம்பர்கள் பயன்படுத்தப்படுகிறதோ அதே போல் தான் புதிய நோட்டுக்களில் எண்களுக்கு பதிலாக ஸ்டார் சிம்பல்  பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறியீடு இருந்தால் அது புதிதாக மாற்றப்பட்ட நோட்டு என அடையாளம் கண்டு கொள்ளலாம். 

ரூ,2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சிகள் பாலிமென்ட்டில் கேள்வி எழுப்பி வருகின்றன. கருப்பு பணத்தை  ஒழிக்கிறேன் என்ற பெயரில் உயர் பண மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெற்று வருகிறீர்கள். ரூ.2000, ரூ.1000 நோட்டுக்களை திரும்பப் பெற்று விட்டீர்கள். அடுத்து உயர் பண மதிப்பு கொண்டது ரூ.500 தான். அதையும் திரும்ப பெறும் அரசுக்கு உள்ளதா? கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்