சென்னை: காதல் வேடங்களிலும், கலகலப்பான பாத்திரங்களிலும், அழுத்தமான நடிப்பிலும் அசத்தியுள்ள ராஷ்மிகா மந்தனாவை மையமாக வைத்து ஒரு புதிய படம் உருவாகிறது.
கீதா ஆர்ட்ஸ், மாஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் தீரஜ் மொகிலினேனி என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்க, இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்பத்திற்கு தி கேர்ள்ஃபிரண்ட் என பெயரிட்டஉள்ளனர்.
தெலுங்கு, தமிழ் படங்களில் ஏராளமாக நடித்துப் புகழ் பெற்றவர் ராஷ்மிகா. தெலுங்கில் இவர் நடித்த புஷ்பா மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஆனது. தமிழில் வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்திருந்தார். தற்போது இந்தியிலும் புகுந்திருக்கிறார் ராஷ்மிகா. இவர்தான் தி கேர்ள் பிரண்ட் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். இவரை சுற்றித்தான் கதை புனையப்பட்டுள்ளது. அதாவது ஹீரோயின் ஓரியன்டட் படமாக இது உருவாகிறது.
ஹீரோயின் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் கூட அனைத்து வயதினரும் என்ஜாய் செய்து இப்படத்தைப் பார்க்க முடியும் முடியும் என்று படக் குழு நம்பிக்கையுடன் சொல்கிறது. தனது காதலியிடம் எதிர்பார்க்கும் உரையாடல்களை அழுத்தமாக கொண்டிருக்கும் இந்த அழுத்தமான படைப்பில் தனது ரசிகர்களை அசத்தவுள்ளார் ராஷ்மிகா. இதில் அவரது தோற்றம் அழகாகவும், அர்த்தமுள்ளதாகவும் இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
தேசிய நாயகியாகியுள்ள ராஷ்மிகாவின் வித்தியாசமான நடிப்பில் வரும் தி கேர்ள் பிரண்ட் அனைவரையும் வசீகரிப்பார் என்று நம்பலாம்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்ச்சை பேச்சு...வருத்தம் தெரிவித்த அமைச்சர் துரைமுருகன்
{{comments.comment}}