சென்னை: தமிழ்நாட்டில் இன்று பிறை தென்படாத காரணத்தால், ரம்ஜான் பண்டிகை, வியாழக்கிழமை கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜியார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மார்ச் 12ம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று பிறை தென்படவில்லை. இதையடுத்து ரம்ஜான் பண்டிகை ஏப்ரல் 11ம் தேதி வியாழக்கிழமையன்று கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசின் தலைமைக் காஜியார் சலாஹுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார்.
பிறை எப்போது தென்படும் என்ற எதிர்பார்ப்பிலும், ஆ்வலிலும் இன்று பலரும் காத்திருந்தனர். இருப்பினும் இன்று பிறை தென்படவில்லை என்பதால் பண்டிகை ஒரு நாள் தள்ளிப் போயுள்ளது.
இதற்கிடையே சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தானில் இன்று பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கெல்லாம் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வழக்கமாக சவூதியில் ரம்ஜான் கொண்டாடப்படும் சமயத்தில்தான் கேரளாவிலும் தமிழ்நாட்டின் கோவையிலும் ரம்ஜான் கொண்டாடப்படுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் போலவே, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இன்று பிறை தென்படவில்லை. இதனால் அங்கும் 11ம் தேதிதான் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}