சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று கோலாகலமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
முஸ்லிம்களின் புனித மாதமாக ரம்ஜான் மாதம் கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் இன்று ரம்ஜான் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வழக்கமாக ரம்ஜான் பண்டிகையின் தேதியானது ஒவ்வொரு ஆண்டும் சந்திரனை மையமாக கொண்டு கொண்டாடப்படும். பிறை தெரிந்த பிறகு ரம்ஜான் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் ஒரே நாள் கொண்டாடாமல், ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வேறுபாட்டில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன் படி நேற்று சவூதி அரேபியாவில் ரம்ஜான் கொண்டாடப்பட்டது. சவூதியில் நேற்று ரம்ஜான் கொண்டாடப்பட்டதால் கோவையிலும் நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டின் இதர பகுதிகளிலும், நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்பட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் காலையிலேயே சிறப்புத் தொழுகையுடன் ரம்ஜான் கொண்டாடப்பட்டது.
மதுரை எல்லிஸ் நகரில் நடந்த சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல கோவை உக்கடம் பகுதியில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருச்சியில் சையத் முர்துஸா பள்ளி வளாகத்தில் நடந்த தொழுகை நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரண்டு வந்து பங்கேற்றனர். டெல்லி ஜம்மா மஸ்ஜித் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பள்ளிவாசல்கள், மசூதிகளிலும் சிறப்புத் தொழுகை நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}