ராமேஸ்வரம்: இலங்கை ரோந்து கப்பல் மோதி உயிரிழந்த ராமேஸ்வரம் மீனவர் மலைச்சாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
400 விசைப்படகுகளில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் ரோந்து வந்துள்ளனர். இலங்கை கடற்படையினரை கண்டதும் தமிழக மீனவர்கள் விசைபடகுகளை கரைக்கு வேகமாக திருப்பியுள்ளனர். அப்போது, மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து துரத்தி வந்துள்ளனர்.
இதில், கார்த்திகேயன் என்பவரது படகு மீது இலங்கை கடற்படையினரின் ரோந்து படகு மோதியதில், கார்த்திகேயனின் படகில் நீர் புகுந்து, கடலில் மூழ்கியது. இந்த விபத்தில் மீனவர் மலைச்சாமி கடலில் மூழ்கி இறந்தார். முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாயமான ராமச்சந்திரனை தேடும் பணி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ரமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 மணி நேரம் நீதி கேட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்தது. இலங்கை கடற்படையினரின் இந்த அத்துமீறலுக்கு மத்திய அரசும் உடனடியாக ரியாக்ட் செய்தது. தமிழக மீனவர் உயிரிழந்து இருப்பதற்கு, டெல்லியில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிளை நேரில் அழைத்து மத்திய அரசு தனது கண்டனத்தை தெரிவித்தது.
அதேசமயம், இலங்கை ரோந்து படகு மோதி உயிரிழந்த மீனவரின் உடலை ராமேஸ்வரம் கொண்டு வரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று அறிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்று காயமடைந்த மீனவர்கள் முத்து முனியாண்டி, மூக்கையா ஆகிய இருவரும் சரியாக நள்ளிரவு 2 மணியளவில் இந்திய கடற்படை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
அதன்பின்னர் இந்திய கடற்படை அதிகாரிகள் அதிகாலை 4மணியளவில் ராமேஸ்வரத்திற்கு அவர்களை அழைத்து வந்தனர். மலைச்சாமியின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீனவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு அசாதாரண நிலை நீடிக்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}