லக்னோ: ராம நவமி தினத்தில் நடந்த அதிசயம் பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி, ராமர் கோவிலில் ராமர் சிலையின் நெற்றில் பட்ட சூரிய ஒளியால் பக்தர்கள் திகைத்துள்ளனர்.
அயோத்தி ராமர் கோவில், கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி 22ம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு பால ராமரை தரிசனம் செய்து ஆசி பெற்றனர். அதன் பின்னர் ஏராளமான பொது மக்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து ராமரின் ஆசியை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், ராமநவமி நாளான இன்று ராமர் கோவிலில் இன்று மதியம் சுமார் 12.16 மணிக்கு கருவறையில் உள்ள ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளிபடும் அரிய நிகழ்வு நடைபெற்றது. சூரியனின் ஒளி ராமரின் நெற்றியில் திலகம் இட்டது போல் பட்டது. இந்த காட்சி சுமார் 5 நிமிடம் மட்டுமே நீடித்தது. இந்த அரிய நிகழ்வு சமூக வலைதளங்களில் பரவி அனைத்து தரப்பினர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒளி ராமர் நெற்றியில் படும் விதத்தில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் ராம கோஷம் எழுப்பி ராமரை வழிபட்டனர். ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பால ராமர் மஞ்சள் நிற ஆடை அலங்காரத்தில் காட்சியளித்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}