ராஜீவ் காந்தி வாழ்க்கையை மிகக் கொடூரமாக முடித்து விட்டனர்.. சோனியா காந்தி வேதனை

Aug 21, 2023,11:44 AM IST
டெல்லி: ராஜீவ் காந்தி தான் பதவியில் இருந்த மிகக் குறுகிய காலத்தில் நிறைய சாதனைகளைச் செய்தவர். குறிப்பாக பெண்களின் முன்னேற்றத்துக்கு அவர் நிறைய செய்துள்ளார். அவரது வாழ்க்கை மிகக் கொடூரமாக முடிக்கப்பட்டு விட்டது என்று  சோனியா காந்தி கூறியுள்ளார்.

25வது ராஜீவ் காந்தி தேசிய ஒற்றுமை விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு சோனியா காந்தி உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில பகுதிகள்:



ராஜீவ் காந்தியின் அரசியல் வாழ்க்கை மிகக் கொடூரமாக முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் தான் பதவியில் இருந்த குறுகிய காலத்தில் அவர் நிறைய சாதனைகளைச் செய்துள்ளார்.  நாட்டின் ஒற்றுமையில் வேற்றுமை என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர் ராஜீவ் காந்தி.  எப்போதெல்லாம் நாட்டுக்குசேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம் அதைச் செய்யத் தவறாதவர்.

பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், உயர்வுக்காகவும் அவர் பாடுபட்டார். பஞ்சாயத்துகள்,உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க போராடியவர், பாடுபட்டவர். இன்று நாடு முழுவதும் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜீவ் காந்திதான்.  அவரது தொலைதூரப் பார்வைதான் காரணம். மேலும் வாக்காளர்களின் வயதையும் 21 என்பதிலிருந்து 18 ஆக குறைத்தவர் ராஜீவ் காந்திதான் என்றார் சோனியா காந்தி.



1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். நேற்று ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் எதிர்ப்பு என்பது... முதல்வர் ஆடும் சுயநல நாடகம்: பாஜக தலைவர் அண்ணாமலை!

news

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

news

4 நாட்களுக்கு பின்னர் இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை... சவரனுக்கு ரூ.520 உயர்வு!

news

நன்றி அப்பா.. மகிழ்ச்சியோடு போய் வாருங்கள்.. குமரி அனந்தன் குறித்து டாக்டர் தமிழிசை உருக்கம்!

news

இலக்கியச் செல்வர்.. காங்கிரஸ் மூத்த தலைவர்.. காமராஜரின் சிஷ்யர்.. மறைந்தார் குமரி அனந்தன்!

news

மதுரை குலுங்க.. வைகை ஆற்றில் கள்ளழகர்.. வந்திறங்க போறாரு.. வெளியானது தேதி!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 09, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

அதிகம் பார்க்கும் செய்திகள்