சென்னை: சென்னை நகரிலும், புறநகர்களிலும் விட்டு விட்டு ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழை பெரிய அளில் இதுவரை பெய்யவில்லை. மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் இதுவரை வழக்கமான மழைப் பொழிவு இல்லை. பற்றாக்குறையில்தான் இந்த சீசன் ஆரம்பித்துப் போய்க் கொண்டிருக்கிறது.
சென்னையைப் பொறுத்தவரை வட கிழக்குப் பருவ மழை வச்சு செய்யும். வெள்ளப் பெருக்கு ஏற்படும். நகரின் பல பகுதிகள் மிதக்கும். ஆனால் இதுவரை சென்னையில் இதுவரை ஒரு Spell கூட உருப்படியாக இல்லை. திடீர் திடீரென சாரல் மழை போல வருகிறது.. போய் விடுகிறது. அதுவும் மொத்த நகரிலும் மழை பெய்வதில்லை. மாறாக தேனாம்பேட்டையில் பெய்யும்.. குரோம்பேட்டையில் வெயில் அடிக்கும்.. மாம்பலத்தில் பெய்யும் .. மயிலாப்பூரில் வெயில் வெளுக்கும்.. இப்படித்தான் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இன்றும் கூட காலை முதல் ஆங்காங்கே குட்டி குட்டியாக மழை வந்து வந்து போகிறது. என்ன இது விளையாட்டு என்று வடிவேலு பாணியில் மழையைப் பார்த்து மக்கள் கேலியாக கேட்கும் அளவுக்குத்தான் இந்த மழை இருக்கிறது.
தீபாவளிக்கு சூப்பர் மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையே, தீபாவளிப் பண்டிகை சமயத்தில் தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 4ம் தேதி 12 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாம். 5ம்தேதி 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து 3 தோல்வி.. இன்று இரண்டாவது வெற்றியை ஈட்டுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
பங்குனி உத்திரம்.. பழனி முருகன் கோவிலில் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் பிகே சேகர்பாபு
வார்த்தைகள் இன்றி .. வெட்கத்தில் காதல் இசையை பரப்பிய.. இலையின் இதயம்!
வங்கக்கடலில் உருவான..காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.. இந்திய வானிலை மையம்!
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்
எரிபொருளின் கலால் வரி, வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு கண்டனத்திற்குரியது.. நாதக சீமான்!
இன்னும் 9 மாதம் தான் உங்கள் ஆட்சி.. எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாது: எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்
Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!
{{comments.comment}}