இரவு வரை மழை தொடரும்.. பிறகு செங்கல்பட்டிலும், அடுத்து சென்னையிலும் குறையும்.. பிரதீப் ஜான்

Dec 04, 2023,05:42 PM IST

சென்னை: சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களில் இன்று இரவு வரை தொடர்ந்து மழை பெய்யும்.. விட்டு விட்டும், இடைவிடாமலும் பெய்யும். புயல் நமக்கு அருகே இருக்கும் வரை மழையை நாம் தவிர்க்க முடியாது. இரவில் படிப்படியாக மழை குறைய ஆரம்பிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


சென்னையை உலுக்கி எடுத்து வருகிறது மிச்சாங் புயலால் பெய்து வரும் அதீத கன மழை. சரமாரியாக பெய்து வரும் மழையால் சென்னை நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இவ்வளவு மழை பெய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 2015 ம் ஆண்டு பெருமழையை தற்போதைய மழை மிஞ்சி விட்டது.


இந்த மழை எப்படா நிற்கும் என்று எல்லோரும் கவலையுடன் கேட்க ஆரம்பித்து விட்டனர். இப்படியே பெய்து கொண்டிருந்தால் என்னாவது  என்ற கவலை எல்லோருக்கும் வந்து விட்டது. 




இந்தநிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இரவு வரை இந்த மழை தொடரும். இடைவிடாமலும், விட்டு விட்டு விட்டும் பெய்யும்.  புயல் நமக்கு அருகே இருக்கும் வரை நம்மால் மழையைத் தவிர்க்க முடியாது.


2015ம் ஆண்டு வெள்ளத்திற்குப் பிறகு சென்னைக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய மழை இதுதான். சில இடங்களில் மழைப்பொழிவின் அளவை சரியாக எடுக்க முடியவில்லை. இதனால் சரியான மழைப்பொழிவு அளவு நம்மிடம் இல்லை.


இரவில் மழை படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். முதலில் செங்கல்பட்டிலும், பிறகு சென்னையிலும் மழை குறையும். அடுத்து நள்ளிரவுக்கு மேல் திருவள்ளூரில் மழை குறையா ஆரம்பிக்கும்.


இதுவரை மீனம்பாக்கத்தில் 415 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது நுங்கம்பாக்கத்தை விட அதிகம். நுங்கம்பாக்கம் வானிலை மையத்தில் 390 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது என்று பிரதீப் ஜான் கூறியுள்ளார்.


நேற்று இரவு முதல் பெய்து வரும் மழையில் பிற்பகல் லேசான தொய்வு காணப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் வலுவாக மழை பெய்து வருவதால் நான்கு மாவட்ட மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்