14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்.. வெளுக்கப் போகும் ஜில் ஜில் மழை.. சூப்பர் அப்டேட்!

May 16, 2024,11:21 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக அநேக இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் மக்கள், விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால்   கோடை காலத்திற்கு குட் பாய் சொல்லிவிட்டு மழைக்காலம் வந்தது போல் தமிழ்நாடே குளுமையான வானிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் விவசாயிகள் குஷியில் உள்ளனர். 


தஞ்சாவூர் - டெல்டா மாவட்டங்கள்:




தஞ்சை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலிலேயே நல்ல மழை பெய்து வருகிறது. அம்மா சத்திரம், கரிசல்குளம்,  தேபெருமாநல்லூர், திருப்புவனம், புளியம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்துள்ளது.


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 16 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்துள்ளது. அதன் அடுத்தபடியாக அதிராம்பட்டினத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவானது. தஞ்சையில் இரண்டு சென்டிமீட்டர் மழையும், மதுக்கூரில் 10.6 சென்டிமீட்டர் மலையும் பெய்துள்ளது.


சென்னை:


செங்கல்பட்டு மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இதன் எதிரொளியாக சென்னை கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருப்போரூர், கோவளம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.


சென்னை நகரிலும் திருமங்கலம் அம்பத்தூர், தொழிற்பேட்டை, கோயம்பேடு, அண்ணா நகர், விருகம்பாக்கம், உள்ளிட்ட பல இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.


திருவாரூர்:


திருவாரூர் மாவட்டம் திருபுறைப்பூண்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. வேலூர், மணலி, அனத்தம்பாடி, ஆத்தூர், மணலூர், நெடுங்குளம், எழிலூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.


ராமேஸ்வரம்:


ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இப்பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.ராமநாதபுரம், திட்டக்குடி, மேலவாசல் வீதி, பேருந்து நிலையம், சம்பை, மாங்காடு, தனுஷ்கோடி, போன்ற இடங்களில் பரவலாக கன மழை பெய்துள்ளது.


மயிலாடுதுறை:


மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள தரங்கம்பாடி செல்லும் நெடுஞ்சாலையில் 50 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்போது வேரோடு சாய்ந்த அந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.


மதுரை:




மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. சிம்மக்கல், பெரியார் பேருந்து நிலையம், காளவாசல், அவனியாபுரம்,  பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது. அதேபோல திருமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்தது.


நாகை:


நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலில் நல்ல மழை பெய்து வருகிறது. வெளிபாளையம், பப்ளிக் ஆபீஸ் ரோடு, புத்தூர், கணக்குப்பிள்ளை போன்ற பகுதிகளிலும் , வேளாங்கண்ணி, வேதாரண்யம், தலை ஞாயிறு, போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


நெல்லை:


நெல்லையில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டி தீர்த்தது.அங்கு கன மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெய்த கனமழையால் ரயில்வே தரைப்பாளத்தில் தேங்கிய நீரில் அரசு பேருந்து சிக்கியது. அங்கு 40 அடி உயரத்தில் மழை நீர் தேங்கியது. இதன் பின்னர் பேருந்தில் உள்ள 60க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.


கரூர்:


தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெயில் பதிவாகும் கரூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.


விருதுநகர்:


நேற்று விருதுநகரில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில் விருதுநகரில் மிக கனமழை கொட்டி தீர்த்தது.குறிப்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சூளக்கரை, அல்லம்பட்டி, பாண்டியன் நகரில் கன மழை பெய்தது.


தேனி:


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேகமலை அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை




இதற்கிடையே, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைபெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரத்தில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவானது. புதுச்சத்திரம் 2.3 சென்டிமீட்டர் மழையும், ராசிபுரம் திருச்செங்கோடு தலா ஒரு சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. தேனி மாவட்டம் சோத்துப்பாறையில் 8.7 சென்டிமீட்டர் மழையும், அரண்மனைபுதூரில் 2.3 சென்டிமீட்டர் மழையும் பதிவானது.  திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் 8.6 சென்டிமீட்டர் மழை பதிவானது. திண்டுக்கல்லில் 5.3 சென்டிமீட்டர் மழை, நத்தம் 2.8 சென்டிமீட்டர் மழை, 1.3 சென்டிமீட்டர் மழை, கொடைக்கானலில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவானது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்