சென்னை: மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி, கந்தர்வகோட்டையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அரியலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், தஞ்சாவூர், திருவாரூரில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது
இந்த நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறை சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மழை காரணமாக விடுமுறை விடப்பட்ட பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழை விடுமுறையை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் இந்தப் பள்ளிகள் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் மழை லீவு காரணமாக குஷியாகியுள்ள மாணவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக விடுமுறை விட்டு படிப்பு பாழாகி விடக் கூடாது என்பதற்காகத்தான் அதை ஈடு கட்டும் வகையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க அரசு முடிவெடுத்துள்ளது. எனவே மாணவர்களே, மழையை இன்னிக்கு நல்லா அனுபவிங்க.. சனிக்கிழமை ஸ்கூலுக்குப் போய் ஜாலியா பாடத்தையும் படிச்சுருங்க.. அவ்வளவுதானே!
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}