சென்னை: வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் மேக வேறுபாடு காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இரண்டாவது நாளாக தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.
குறிப்பாக நேற்று இரவு திருவான்மியூர், அடையார், மெரினா, பிராட்வே, மந்தவெளி, அமர்ந்தகரை, அண்ணா நகர், வில்லிவாக்கம், ஆவடி, அம்பத்தூர், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதைப்போல் திருவொற்றியூர், ராணிப்பேட்டை, எண்ணூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராமநாதபுரம், போன்ற சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் சாலை ஓர வியாபாரிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
இதற்கிடையே ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 9 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது . அதேசமயம் மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் நாளை புதியதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}