வயநாடு தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி.. பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிப்பு

Jun 17, 2024,07:38 PM IST

டெல்லி: வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் எம்.பியாக தொடரவுள்ளதாகவும், வயநாடு தொகுதியில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா போட்டியிடுவார் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வயநாடு தொகுதியில் கடந்த முறையும் அவர் அபார வெற்றி பெற்றிருந்தார். ரேபரேலி தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முன்பு உறுப்பினர்களாக இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த நிலையில் இரு தொகுதிகளிலும் அவர் அபார வெற்றி பெற்றார். இதனால் எந்தத் தொகுதியை ராஜினாமா செய்வது என்பதில் ராகுல் காந்திக்கே குழப்பமாக உள்ளதாம். இரு தொகுதி மக்களும் எனது கடவுள்கள். எனவே இதை அவர்களே முடிவு செய்யட்டும் என்று சமீபத்தில் வயநாட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியிருந்தார்.


தலைவர்களுடன் ஆலோசித்த பின்னர் முடிவு




இந்த நிலையில், இன்று தனது முடிவை அறிவித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களுடன் இன்று மாலை ஆலோசனை நடத்திய பின்னர் வயநாடு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.


புதிய சாதனை படைக்கப் போகும் சோனியா குடும்பம்:


பிரியங்கா காந்தி இதுவரை தேர்தல்களில் போட்டியிட்டதில்லை. அவர் உ.பி மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவராக இருந்து வருகிறார். அவர் ரேபரேலி தொகுதியில்தான் போட்டியிடுவார் என்று பலரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது அவரை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அழைத்து வருகிறார்கள்.  பிரியங்கா காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றால் புதிய சாதனை ஒன்று படைக்கப்படும்.


வட இந்தியத் தலைவர்கள் யாரும் தெற்கில் போட்டியிட்டு வென்றதில்லை. சோனியா காந்திதான் அந்த சாதனையை முதலில் செய்தார். கர்நாடகத்தின் பெல்லாரி தொகுதியில் அவர் போட்டியிட்டு வென்றார். வலிமை வாய்ந்த சுஷ்மா சுவராஜைத் தோற்கடித்தவர் அவர். அதன் பின்னர் அவரது மகன் ராகுல் காந்தி கேரளாவின் வயநாட்டில் போட்டியிட்டார். இப்போது அதே குடும்பத்தைச் சேர்ந்த பிரியங்காவும் வயநாட்டில் வெற்றி பெற்றால், தெற்கில் போட்டியிட்டு வென்ற முதல் வட இந்திய அரசியல் குடும்பம் என்ற பெருமை சோனியா குடும்பத்துக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்