அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல்காந்தி

Mar 30, 2024,06:32 PM IST

டெல்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கப்படும் என  அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வாக்குறுதி அளித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அளிவிப்பில், இந்திய மக்கள் தொகையில் பெண்களின் பங்கு 50 சதவீதம் இல்லையா? இந்த சூழலில், மேல் நிலை மற்றும் உயர் கல்வியில் பெண்களின் பங்கு 50% ஆக இருப்பது ஏன்? அவர்களின் பங்கு ஏன் குறைவாக உள்ளது? ஏன் இன்னும் 3ல் ஒரு பெண் மட்டுமே பணியில் இருக்கிறார். 10 அரசு வேலைகளுக்கான இடங்களில் ஒருவர் மட்டுமே பெண்ணாக இருப்பது ஏன்?  மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டை நடத்தும் அரசாங்கத்தில் பெண்களுக்கு சமமாக பங்களிப்பு இருந்தால் மட்டுமே பெண்களின் திறன் முழுமையாக பயன்படுத்தப்படும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம்.




எனவே, அனைத்து அரசு பணிகளிலும் 50% பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பாதுகாப்பான வருமானம், பாதுகாப்பான எதிர்காலம், ஸ்திரத்தன்மை மற்றும் சுய மரியாதை உள்ள பெண்கள் உண்மையிலேயே சமூகத்தின் சக்தியாக மாறுவார்கள். அரசு பதவிகளில் 50 சதவீத பெண்களை கொண்டிருப்பது நாட்டின் ஒவ்வொரு பெண்ணுக்கும் பலத்தை தரும். சக்தி வாய்ந்த பெண்கள் இந்தியாவில் தலைவிதியை மாற்றுவார்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்