பயமா? எனக்கா?.. வயநாடு, ரேபரேலி.. ரெண்டும் எனக்கு தான்.. கில்லி போல் சொல்லி அடித்த ராகுல் காந்தி!

Jun 04, 2024,12:07 PM IST

டெல்லி :  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தோல்வி பயம் காரணமாக தான் அமேதியில் போட்டியிடவில்லை என சொல்லி பாஜக.,விற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தொடர்ந்து அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். இரண்டிலும் அவர் வெல்வது உறுதியாகி விட்டது.


உண்மையில் அமேதியில் ராகுல் காந்தி போட்டியிட்டிருந்தால் நிச்சயம் அங்கு வென்றிருக்கக் கூடும். காரணம், கடந்த தேர்தலில் அங்கு ராகுலை தோற்கடித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தற்போது அங்கு தோல்வியைத் தழுவிக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 




ராகுல் காந்தி, 2019 லோக்சபா தேர்தலிலும் வயநாடு மற்றும் அமேதி ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டார். ஆனால் கேரளாவின் வயநாட்டில் மட்டுமே அவர் வெற்றி பெற்றார்.  மாறாக உ.பி., மாநிலத்தில் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் பாஜக.,வின் ஸ்மிருதி இராணியிடம் தோல்வி அடைந்தார். 2024 லோக்சபா தேர்தலில் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார் ராகுல் காந்தி. அதே சமயம் அமேதி தொகுதியில் போட்டியிடாமல் தனது தாய் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் இந்த முறை போட்டியிட்டார்.


தோல்வி பயம் காரணமாக தான் இந்த முறையும் ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அதனால் தான் அமேதியில் போட்டியிடாமல் பின்வாங்கி, ரேபரேலி தொகுதியில் பாதுகாப்பாக போட்டியிடுகிறார் என பாஜக., சார்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அவற்றை கண்டு கொள்ளாமல், இந்த முறை தாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என முழு மூச்சாக களத்தில் வேலை செய்தார் ராகுல் காந்தி.


அவர் சொல்லியபடியே வயநாடு தொகுதியில் காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே தொடர்ந்து மிகப் பெரிய வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகிறார். ரேபரேலி தொகுதியிலும் நல்ல வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார். வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து சிபிஐ கட்சியின் அன்னி ராஜா போட்டியிடுகிறார்.  அதே போல் ரேபரேலியில் பாஜக.,வின் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிடுகிறார்.


ராகுல் காந்தி இனிமேல் உ.பியில் வெல்லவே முடியாது, அவரது கதை முடிந்தது, காந்தி குடும்பமே இனி உ.பியில் தலையெடுக்க முடியாது என்றெல்லாம் பாஜக தரப்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. கேலி கிண்டல்களுக்கும் பஞ்சமே இல்லை.. ஆனால் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளது காங்கிரஸ். ராகுல் காந்தி ஜெயிப்பது மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் இழந்திருந்த செல்வாக்கையும் உ.பியில் மீட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்