கோயம்புத்தூர்: கோவையில் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒரே மேடையில் இந்திய கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.
லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தேசிய கட்சிகள் பிரச்சாரம் செய்ய தமிழ்நாடு நோக்கி படை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லையில் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் ராகுல் காந்தி திருவனந்தபுரம் செல்கிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் நெல்லை பாளையங்கோட்டைக்கு 3:50 மணிக்கு வருகிறார். பின்னர் பெல் மைதானத்தில் நான்கு மணி அளவில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளரரை ஆதரித்து பேச இருக்கிறார். நெல்லையில் நடைபெறும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு மீண்டும் திருவனந்தபுரம் செல்கிறார் ராகுல் காந்தி.
இரவு 7 மணி அளவில் திருவனந்தபுரத்திலிருந்து கோவைக்கு வருகிறார். கோவையில் ஏற்கனவே பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். அங்கு முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் ராகுல் காந்தி ஒரே மேடையில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து தீவிர வாக்கு சேகரிக்க உள்ளனர். இதற்காக 2 லட்சம் பேர் அமரும் வகையில் மிகப் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தொடர்ந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழ்நாட்டிற்கு பிரச்சாரம் செய்ய வர இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நெல்லை மற்றும் கோவைக்கு பிரச்சார மேற்கொள்ள வருவதை ஒட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி செல்லும் சாலையில் மக்களின் கூட்டத்தை முறைப்படுத்த இருபுறமும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}