ராஜ்கோட்: 3வது டெஸ்ட் போட்டியின் பாதியிலேயே அணியிலிருந்து விலகிய சுழற்பந்து வீச்சாளர் ஆர். அஸ்வின் தற்போது மீண்டும் அணியில் இணையவுள்ளதாக பிசிசிஐ கெளரவச் செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்து வருகிறது. தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் நடந்து கொண்டுள்ளது. முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியுடன் இரு அணிகளும் உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் நகரில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் அணியின் முக்கிய வீரரான ஆர். அஸ்வின் 2வது நாளிலேயே பிரேக் எடுத்துக் கொண்டு வெளியேறினார். குடும்பத்தில் ஏற்பட்ட மருத்துவ அவசரம் காரணமாக அவர் அணியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் 3வது டெஸ்ட் போட்டியில் இணையவுள்ளார் அஸ்வின்.
3வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் அஸ்வின் இணையவுள்ளதாக ஜெய்ஷா தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் விளையாடுவார் என்றும் ஜெய்ஷா அறிவித்துள்ளார்.
வீரர்களின் குடும்பத்தின் நலன் மிக முக்கியமானது. இதை பிசிசிஐ எப்போதும் உணர்ந்திருக்கிறது. அஸ்வினுக்கு ஏற்பட்ட இந்த மருத்துவ அவசர தேவைச் சூழலில் அணி நிர்வாகம், சக வீரர்கள், ஊடகங்கள், ரசிகர்கள், பிசிசிஐ ஆகியோர் துணை நின்றோம். மீண்டும் அஸ்வின் களத்திற்குத் திரும்புவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் ஜெய்ஷா.
அஸ்வின் மீண்டும் ஆட வருவதால் இந்திய அணியும் பலமடைந்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில்தான் அஸ்வின் தனது 500வது டெஸ்ட் விக்கெட்டை வீழ்த்தி புதிய மைல்ஸ்டோனை எட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}