பொது சிவில் சட்ட மசோதா.. உத்தரகாண்ட் சட்டசபையில் நிறைவேற்றம்.. நாட்டிலேயே முதல் மாநிலம்!

Feb 07, 2024,06:54 PM IST

டேராடூன்:  இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பாஜக ஆளும் உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.


"உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இந்த நாள் விசேஷமான தினமாகும். நீண்ட காலமாக அனைவரும் எதிர்நோக்கியிருந்த மசோதா (The Uniform Civil Code Uttarakhand 2024 Bill) இது. இந்த மசோதா இன்று சட்டசபையில் விவாதத்திற்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தமி.


இந்தியாவிலேயே பொது சிவில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது உத்தரகாண்ட் மாநிலத்தில்தான். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பாஜக ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த சட்ட மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ராஜஸ்தான் மாநில அரசு அடுத்த சட்டசபைக் கூட்டத்தில் இதை கொண்டு வரப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. 


பொது சிவில் சட்டம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்று பொருள்படும். அதாவது திருமணம், விவாகரத்து, சொத்துப் பிரிப்பு, தத்தெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில், மத அடிப்படையில் எந்தவிதமான பாரபட்சமும்  இல்லாமல் அனைத்து மதத்தினருக்கும் ஒரே மாதிரியான சட்டத் தீர்வுக்கு இது வழி வகுக்கும். தற்போது இஸ்லாமியர்களுக்கு தனி சட்ட நடைமுறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் என்பதால் பொது சிவில் சட்டத்திற்கு இல்ஸாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உத்தரகாண்ட் சபையில் இந்த சட்ட மசோதா மீதான விவாதம் 3 நாட்களுக்கு நடைபெற்றது. இன்று மாலை மசோதா நிறைவேற்றப்பட்டது. 


அதன் பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் தமி பேசுகையில், இது முக்கியமான தினம். நாங்கள் இன்று நிறைவேற்றியுள்ள சட்டத்தைத்தான் ஒட்டு மொத்த தேசமும் எதிர்நோக்கியுள்ளது. நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்ட் சட்டசபையில் அதை நிறைவேற்றியுள்ளோம். இதற்காக பாடுபட்ட அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இதற்கு எங்களுக்கு வழிகாட்டியாக திகழும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்த சட்ட மசோதா யாருக்கும் எதிரானதல்ல. ஆனால் அனைவருக்கும் இது நலம் பயக்கும், குறிப்பாக இஸ்லாமியப் பெண்களுக்கு இது நல்லது செய்யும். அனைவருக்கும் சம வாய்ப்புகளை, உரிமைகளை இது அளிக்கும். பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை அகற்ற இது உதவும் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

டானா புயல் வலுப்பெற்றது.. நாளை ஒடிஷாவில் கரையைக் கடக்கும்.. தமிழ்நாட்டுக்கும் கன மழை உண்டு!

news

ஓய்வு பெறுகிறார் நீதிபதி டிஒய் சந்திரசூட்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம்

news

விஜய் கட்சியின்.. விக்கிரவாண்டி மாநாட்டு தேதிக்கு பின்னால இவ்வளவு மேட்டர் இருக்கா?

news

தமிழக வெற்றிக் கழக மாநாடு.. ஏற்பாடுகள் பிரமாண்டம்.. பாதுகாப்புக்கு மட்டும் 5,500 போலீஸ்!

news

சென்னை பீச்சில் அடாவடி செய்த.. சந்திரமோகன் தனலட்சுமி.. ஜாமீன் கேட்டு மனு தாக்கல்!

news

Ration Shops: தீபாவளியை முன்னிட்டு.. வரும் ஞாயிற்றுக்கிழமை.. ரேஷன் கடைகள் இயங்கும்

news

தலைமைச் செயலகத்தில் அதிர்வு?.. ஊழியர்கள் பதட்டம்.. கட்டடம் நன்றாக உள்ளது.. அமைச்சர் எ.வ.வேலு

news

ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

news

தக்காளி ஒரு கிலோ ரூ.65.. பீன்ஸ் ரூ. 200.. பூண்டு ரூ.440.. இதுதாங்க கோயம்பேடு மார்க்கெட் நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்