வெயில் காலத்தை சமாளிக்க.. புதுச்சேரி அரசு.. எடுத்த "கூல் கூல்" நடவடிக்கை.. என்ன தெரியுமா..?

May 03, 2024,04:17 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் கடும்  வெயிலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாவதால் புதுவையில் உள்ள நான்கு சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.


அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே தமிழகம் மற்றும் புதுவையில் வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. அதிகாலை ஏழு மணிக்கே சூரிய தரிசனம் கிடைத்து மாலை ஆறு மணி ஆனாலும் சூரியன் மறையாமல் வெப்ப கதிர்களால் நம்மை தாக்கி வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.




இது மட்டுமல்லாமல் வேலைக்காக வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஏனெனில் சாலைகளில் சற்றும் கூட நிழல் இல்லாமல் எங்கே ஒதுங்குவது என்ற எதிர்பார்ப்பில் தகித்து வருகின்றனர். குறிப்பாக சிக்னல்களில்தான் மக்கள் கடும் வெயிலில் வாடும் சூழல் உள்ளது. கண்டிப்பாக வெளியே சென்று கூலி வேலை பார்த்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மக்கள் படும் அவதிதான் சொல்லி மாள முடியாதது. கடும் வெயிலை கூட பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் கடும் அவஸ்தையை சந்தித்தும், வெயிலால் பாதிப்படைந்தும் வருகின்றனர்.




இந்த நிலையில், புதுச்சேரி அரசு வெயில் தாக்கத்தை சமாளிக்க புதிய யுத்தியை கையாண்டுள்ளது. அது என்ன தெரியுமா.. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அங்காங்கே போடும் சிக்னலில் நின்று தான் செல்ல வேண்டும். அது ஐந்து நிமிடமா இருந்தா என்ன.. பத்து நிமிடமாக இருந்தால் என்ன.. எவ்வளவு வெயில் அடித்தாலும் டிராபிக் ரூல்ஸை பாலோ பண்ண தான் வேண்டும். தற்போது கடும் வெயில் நிலவிவரும் நிலையில் என்ன செய்வது என்று அறியாமல் உச்சி வெயிலில் வாடி வதங்கி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.




இதற்காக புதுச்சேரி அரசிடம்  போக்குவரத்து சிக்னல்களில் பசுமைப் பந்தல்‌ அமைக்குமாறு பல்வேறு தரப்பினரிடையே கோரிக்கை எழுந்து வந்தது. இதனை அடுத்து புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் பொதுப்பணி துறையினரிடம்  பசுமை பந்தல் அமைக்குமாறு உத்தரவிட்டார்.

 இந்த உத்தரவின் அடிப்படையில் புதுச்சேரியில் உள்ள அஜந்தா சிக்னல், ஒதியன் சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், முருகா தியேட்டர் ராஜூ சிக்னல், ஆகிய நான்கு சிக்னல்களில் பசுமை பந்தல் அமைத்துள்ளது புதுச்சேரி அரசின் பொதுத்துறை. இதற்கு பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு எழுந்துள்ளது.


புதுச்சேரி சிக்னல்களில் தற்போது பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளதால் சிக்னலில் வாகன ஓட்டிகள்  சற்றே இளைப்பாறி வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்