யாரை விட்டாலும்.. அந்த விவேகானந்தனை மட்டும் விடவே கூடாது.. கொதித்துக் கொந்தளிக்கும் மக்கள்!

Mar 07, 2024,05:53 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி சிறுமிக்கு நடந்த கொடுமை குறித்த விவரங்கள் படிப்படியாக வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. சிறுமிக்கு அந்த வெறிநாய்க் கும்பல் செய்த கொடுமைகளைக் கேட்கும்போது, நெஞ்சில் நெருப்பள்ளிப் போடுவது போல இருக்கிறது. குறிப்பாக அந்த 59 வயது குற்றவாளி விவேகானந்தன் மீதுதான் மக்கள் மொத்தப் பேரின் கோபமும் அதீதமாக இருக்கிறது.


புதுச்சேரி முந்தையால் பேட்டை அருகே உள்ள சோலை நகரில் கடந்த இரண்டாம் தேதி வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த 9 வயது சிறுமி மாயமானார். பின்னர் எங்கு தேடியும் சிறுமியை காணவில்லை என பெற்றோர்கள்  போலீசில் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் சிறுமியை தேடி வந்த போலீசார் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அம்பேத்கர் நகரில் சிறுமியின் கை, கால்கள் கட்டப்பட்டு சாக்கு முட்டையில் கட்டி சாக்கடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதனைத் தொடர்ந்து போலீசார் சடலமாக சிறுமியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் ஏழு பேரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். இதில் 5 பேர் மைனர் வயதுடையவர்கள் என்று தெரிகிறது. மற்ற இருவரில், ஒருவன் கருணாஸ் என்ற 19 வயது இளைஞன் மற்றும் விவேகானந்தன் என்ற 59 வயது அயோக்கியன் ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுடுத்தி கொலை செய்தது தெரியவந்தது. 


மோசமான அயோக்கியன் விவேகானந்தன்




கருணாஸ்தான் சிறுமியை ஐஸ்கிரீம் தருவதாக கூறி அழைத்து வந்துள்ளான். அப்போது அந்த இடத்திற்கு விவேகானந்தன் வந்துள்ளார். இருவரும்  சிறுமியை சீரழிப்பதில் மோதிக் கொண்டுள்ளனர். இருவரும் சேர்ந்து சிறுமியை சீரழித்த போது குழந்தை பரிதாபமாக இறந்து போய் விட்டது. இதையடுத்து தான் கட்டியிருந்த வேட்டியைக் கழற்றி அதில் குழந்தையின், கை, கால்களைக் கட்டி மூட்டை போல கொண்டு போய் கால்வாயில் போட்டுள்ளார் விவேகானந்தன். கருணாஸும், விவேகானந்தனும் மிதமிஞ்சிய கஞ்சா போதையில் இருந்துள்ளனர். போலீஸார் கைது செய்தபோது கூட கருணாஸ் மிக மோசமான போதையில் இருந்துள்ளான் என்று கூறப்படுகிறது. குழந்தையை கொடூரமாக இவர்கள் சித்திரவதை செய்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. 


சிறுமியை மிக மோசமான அளவில் இந்த போதைக் கும்பல் சித்திரவதை செய்து கொலை செய்தது புதுச்சேரி மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. சிறுமியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு விட்ட போதிலும் கூட புதுச்சேரி முழுவதும் வீடுகள் தோறும் இந்த சம்பவம்தான் மக்களை பெரும் சோகத்திலும், கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த அயோக்கியர்களுக்குத் தண்டனை கிடைக்கும் வரை புதுச்சேரி மக்களின் கோபம் குறையாது.. அந்த அளவுக்கு மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.


சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்த அந்த கொடூரர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், உறவினர்கள், என அனைவரும் ஒன்று திரண்டு புதுச்சேரி கடற்கரையில் போராட்டத்தில் குதித்தனர். நீதி வேண்டும்.. நீதி வேண்டும்.. பெண் குழந்தைக்கு நீதி வேண்டும்..என்ற முழக்கத்தில் இளைஞர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இதனால் புதுச்சேரி மாநகரமே பரபரப்பாக காணப்பட்டது.


சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்


இதுபோன்ற கொடூர புத்திக்காரர்களுக்கு தண்டனைகளை பொதுமக்கள் மத்தியில் வழங்க வேண்டும். சட்டங்கள் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும். அப்போதுதான் ஒருவருக்கு கொடுக்கும் தண்டனையை பார்த்து மற்றொருவர் இது போன்ற கொடூர செயலில் ஈடுபட மாட்டார். பாவம் அந்த அப்பாவி  குழந்தைக்கு என்ன தெரியும். இது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை எண்ணி மற்ற குழந்தைகளின் மனம் என்ன பாடுபடும். இது பற்றிய விழிப்புணர்வு கட்டாயம் குழந்தைகளுக்கு வேண்டும்.


பெற்றவர்களுக்கும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எப்படி "குட் டச்.. பேட் டச்".. என்ன என்பதை சொல்லிக் கொடுக்கிறோமோ, அதேபோல ஆண் குழந்தைகளுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஆண்களுக்கும் சிறு வயதிலிருந்தே இந்த விழிப்புணர்வை கொடுக்க வேண்டிய கட்டாயம் வந்து விட்டது. இது போன்ற விழிப்புணர்வுகளை பள்ளிகளில் மேற்கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும். அப்போது தான் இனி வரும் காலத்தில், மாணவர்கள் நேர்வழியில் சென்று நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள முன்வருவார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்