ஏ.ஆர்.ரஹ்மானை அவதூறும் பேசுவதற்கு .. நா கூச வேண்டும்.. சுரேஷ் காமாட்சி அதிரடி!

Sep 12, 2023,04:39 PM IST
சென்னை: ஏ.ஆர். ரஹ்மான் செய்த  சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூறயுள்ளர்.

சென்னையில் நடந்த மறக்குமா நெஞ்சம்  இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோமாளித்தனங்களுக்காக ஏ.ஆர். ரஹ்மானை சிலர் திட்டமிட்டும், தனிப்பட்ட முறையிலும், மத ரீதியாகவும் தாக்கிப் பேசி வருகின்றனர். இதெல்லாம் ஏற்கனவே திட்டமிடப்பட்டவையா என்று சந்தேகிக்கும் அளவுக்கு வசவுகள் ஒரே மாதிரியாக உள்ளன.



இந்த நிலையில் ரஹ்மானுக்கு ஆதரவாக திரையுலகினர்  திரள ஆரம்பித்துள்ளனர். ரஹ்மானை தனிப்பட்ட முறையிலும் மத ரீதியாகவும் தாக்கிப் பேசுவதை கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.இந்த விவகாரத்தில் ரஹ்மான் மீது தவறு இல்லை. மாறாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் மீதுதான் தவறு உள்ளது என்று பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கேள்வி கேட்கப்பட வேண்டியதுதான்

இந்தப் பின்னணியில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ரஹ்மானுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை:

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட தவறுகள் கேள்வி கேட்கப்பட வேண்டியவைதான்.  எப்போதும் தன் சார்ந்து நடக்கும் நிகழ்வுகளில் மிகக் கவனமாக இருப்பவர் இந்த முறை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை நம்பி விட்டதில் ஏகப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அவற்றிற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது. ஏ. ஆர் ரகுமானும் தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.  இருந்தும் சிலர் இந்த நிகழ்வை வைத்துக் கொண்டு வன்மத்தைக் கக்கத் தொடங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது.

ஆஸ்கார் விருது விழா மேடையில் தமிழில் பேசி பெருமைப்படுத்திய மாபெரும் கலைஞனை இவ்வொரு நிகழ்வை வைத்து அசிங்கப்படுத்துவது மிக மிகத் தவறான செயல்.  இத்தனை வருட சாதனைகளை ஒருங்கிணைப்பாளர்களின் கவனக்குறைவால் ஏற்பட்ட ஒரு நிகழ்வால் இழந்துவிட்டதாகப் பேசுவது சரியானதல்ல. 

நிகழ்விற்குப் பொறுப்பேற்று சீர்செய்யும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளபோது மலிவான அரசியல் செய்யும் சிலரின் சந்தர்ப்பவாத பேச்சுக்கு நாமும் ஒத்து ஊதுவது கேவலமான நாகரீகமற்ற செயல்.  அவரது சாதனைகளைக் கூட விட்டுவிடுங்கள்... மனிதாபிமான செயல்களை எடுத்துக்கொண்டால் அவதூறு பேசும் நாக்குகள் சற்று கூசவே செய்யும். 

2016 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி திரட்டி வழங்கினார். 
2018 இல் கேரள மக்கள் பாதிக்கப்பட்ட போது இசை நிகழ்ச்சி நடத்தி நிதி உதவி வழங்கியுள்ளார். 
கொரோனா காலத்தில் நிறைய குடும்பங்களுக்கு உதவியுள்ளார். லைட் மேன் யூனியனுக்கு இசைநிகழ்ச்சி நடத்தித் தந்துள்ளார். 

ஒற்றை நிகழ்வால் சர்வதேச புகழ் கொண்ட ஒரு நாயகனை ஸ்கேமர் என அழைப்பது சரியான செயலா என சிந்தியுங்கள்.  நிகழ்ந்த தவறுகளை சரிசெய்ய நேரம் கொடுங்கள். அவராகவே முன்வந்து சரிசெய்யக்கூடியவர்தான். 

நம்மில் ஒருவரை நாம் தாங்கிப் பிடிக்க வேண்டிய நேரம் இது. வன்மம் பிடித்தவர்களின் நாக்குகளுக்கு நாமும் இரையாக வேண்டாம்.  மாபெரும் கலைஞனின் சிறு சறுக்கலுக்கு உறுதுணையாக நிற்க வேண்டியது நமது கடமை. 

அதேபோல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ந்த தவறுகளுக்கு பொறுப்பேற்று மக்களின் பாதிப்பை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. செப். 21 முதல் 23ம் தேதி வரை.. 3 நாள் பயணம்!

news

தென்னிந்தியாவின் பழம்பெரும் நடிகை.. சிஐடி சகுந்தலா.. நெஞ்சு வலியால் பெங்களூரில் மரணம்!

news

இன்றும் தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.120 குறைவு.. அப்ப கடைக்குக் கிளம்பலாமா?

news

32 வயது.. கல்யாணமாகி 3 வருடமே ஆகிறது.. சுருண்டு விழுந்த இளைஞர்.. கிரிக்கெட் மைதானத்தில் ஷாக்!

news

காலையில் ஷாக்.. என்கவுண்டரில் கொல்லப்பட்ட காக்காதோப்பு பாலாஜி.. 59 வழக்குகளுடன் வலம் வந்தவர்!

news

இந்தியா கூட்டணியின் பந்த் அழைப்பு.. ஸ்தம்பித்தது புதுச்சேரி.. கடைகள், தியேட்டர்கள் மூடல்!

news

பெரியார் திடலுக்கு வந்த விஜய்.. திராவிட ஆதரவாளர்கள் ஹேப்பி.. திமுகவுக்கு சூசக மெசேஜ்?

news

செப்டம்பர் 18 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு

அதிகம் பார்க்கும் செய்திகள்