என்னாது.. ரெஃபிரிஜிரேட்டரில் இந்த உணவுப் பொருட்களையெல்லாம் வைக்கவே கூடாதா?

Sep 23, 2024,06:15 PM IST

பொதுவாகவே சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவுகள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்காகவே நாம் ஃபிரிட்ஜை  பயன்படுத்துகிறோம். அதில் எதை வைக்க வேண்டும். எதை வைக்கக்கூடாது என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் எல்லா பொருட்களையும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து உண்டு வரும் நடைமுறைக்கு மாறி வருகின்றனர்.


நாம் எதையும் வீணாக்க கூடாது சிக்கனமாக இருப்பதே சிறந்தது என்ற பெயரில்  மீந்து போன சாம்பார் குழம்பு பொரியல், ரசம் என  குப்பையில் கொட்ட வேண்டிய அனைத்தையும் நம் வயிறு என்னும் குப்பைத் தொட்டிக்குள் கொட்டுகிறோம். அதுதான் உண்மை.‌ நம் வயிறு என்ன குப்பைத் தொட்டியா.. மீந்துபோன உணவுகள் மற்றும் கெட்டுப்போன உணவுகளை போட்டு விட்டு,நமக்கு எதுவும் ஆகாது என்று நினைப்பதற்கு.




சரி நம் ஃப்ரிட்ஜின்  சீதோசன நிலை எப்படி இருக்கும் என்று அறிந்ததுண்டா. ஏனென்றால் வைக்கப்பட்ட   உணவுகள் ஃப்ரிட்ஜில் கெட்டுப் போகாமல் இருக்க அதன் சீதோசன நிலை சரியான விகிதத்தில் இருக்கிறதா என்பதை அவ்வப்போது அறிய வேண்டும். இல்லையென்றால் அதில் வைக்கப்பட்ட உணவுகள் கெட்டுப்போய் அவற்றை சரியாக சமைக்காமல் நாம் சாப்பிடும் போது அவை நம் உடம்பில் தொற்று நோய்களை ஏற்படுத்தும். அதே சமயத்தில் எல்லா நேரங்களிலும் ஃப்ரிட்ஜின் சரியான சீதோசன நிலையை கண்டறிந்து கொண்டே இருக்கவும் முடியாது. 


நாம் பிரிட்ஜுக்குள் என்னென்ன உணவுகளை வைத்து உண்ண வேண்டும் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். காய் பழங்கள் என சமைக்கப்படாத உணவுகளை ஒருநாள் இரண்டு நாள் வரை பிரிட்ஜில் வைத்து அதனை சமைத்து உட்கொள்ளலாம். அதேசமயம், நீண்ட நாட்கள் பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, சிக்கன், போன்ற அசைவ உணவுகளை  உண்ணக்கூடாது.


நீண்ட நாட்கள் அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து உண்ணும் போது அதில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும். அதனை நாம் சமைத்து சாப்பிடுவதால்  நம் உடலில் பலவித தொற்று நோய்களையும் ஏற்படுத்தும். அது உடல் நலனுக்கு தீங்காக அமையும் என வல்லுனர்கள் கூறுகின்றனர். 


சமைத்த அசைவ உணவுகளை ஃபிரிட்ஜில் வைத்து மறுநாள் மீண்டும் சூடேற்றி சாப்பிடும் போது அதன் தன்மை மாறி  விஷ உணவாகவும் மாற வாய்ப்புண்டு எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது உடல் நலனுக்கு நல்லது.




ஃபிரிட்ஜில் அசைவ உணவுகளை வைத்து சாப்பிடும் போது என்ன மாதிரியான நோய்த்தொற்று ஏற்படும் என்பது தெரியுமா? நீண்ட நாட்களாக அசைவ உணவுகளை பதப்படுத்தி  சாப்பிடும் போது யூ டி ஐ என்ற சிறுநீர் தொற்று ஏற்படுமாம். அதாவது இதனை யூரினரி இன்பெக்சன் எனக் கூறுவர். 


அது மட்டுமல்லாமல் இரைப்பை, ஈரல், சிறுநீரகம், மூளை ஆகியவற்றின் செயல்பாடுகளையும் இழக்கச் செய்யுமாம்.. இதனால் மக்கள் முடிந்த அளவு சமைக்கப்பட்ட அசைவ உணவுகள் மற்றும் மீந்து போன உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்து  சாப்பிடுவதை தவிர்ப்பதே நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தென் மாவட்டங்களுக்கு.. தீபாவளி சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.. புதன் காலை 8 மணிக்கு முன்பதிவு தொடக்கம்

news

பொது இடத்தில் கட்டுக்கடங்காத கோபம் வருதா.. கன்ட்ரோல் பண்ண முடியலையா.. இதைப் படிங்க!

news

குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் அறுத்த விவகாரம்.. போலீஸ் விசாரணை தொடங்கியது

news

மாமல்லபுரத்தில் செக்யூரிட்டியை சரமாரியாக தாக்கிய குடும்பம்.. 2 பெண்கள் உள்பட 3 பேர் அதிரடி கைது!

news

முதல்வரும், துணை முதல்வரும் எத்தனை முறை வந்தாலும்.. சேலம் அதிமுகவின் கோட்டை.. எடப்பாடி பழனிச்சாமி

news

தீபாவளி 2024 ஸ்பெஷல்.. அமுதம் அங்காடிகளில்.. ரூ. 499க்கு 15 பொருட்கள்.. அப்படியே செட்டா வாங்கலாம்!

news

BSNL லோகோ மாறிப் போச்சு.. அது மட்டுமா.. 7 புதிய சேவைகளும் அறிமுகம்!

news

64 சிசிடிவி கேமராக்கள்.. 7 பாதுகாப்பு கோபுரங்கள்.. தி.நகரில் தீயாய் வேலை செய்யும் சென்னை போலீஸ்!

news

என்ன நண்பா விக்கிரவாண்டிக்கு கிளம்பலாமா.. த.வெ.க. மாநாட்டு பணிகள் 90% முடிந்தன!

அதிகம் பார்க்கும் செய்திகள்