வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

Oct 23, 2024,02:21 PM IST

வயநாடு:  கேரள மாநிலம் வயநாடு மக்களைவைத் தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அத்தேர்தலில் போட்டியிட இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரியங்கா காந்தி.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதி மற்றும் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இந்த இரண்டு தொகுதிகளிலும் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் அவர் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் விதிகளின்படி ஒருவர் ஒரு தொகுதியில் மட்டுமே உறுப்பினராக இருக்க முடியும் என்பதால், ராகுல் காந்தி வயநாடு எம்பி பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். 




இதனால் இத்தொகுதி காலியாக இருந்து வந்தது. இதற்கிடையே இந்திய தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதியில் வரும் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பை வெளியிட்டது.  பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் சத்தியன் மோக்கேரி ஆகியோர் வயநாடு தொகுதியில் போட்டியிட உள்ளனர். இதனால் இங்கு மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. 


வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட பிரியங்கா காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக பிரியங்கா காந்தி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம் பி ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உடன் இருந்தனர். தொண்டர்கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கந்த சஷ்டி விரதம் 2024 : கோவிலுக்குப் போகாமல்.. வீட்டிலேயே எளிமையாக விரதம் இருக்கும் முறை

news

கோர்ட்டுக்கு போகாமலேயே இனி விவாகரத்து வாங்கலாம்... சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

news

கந்தசஷ்டி விழா 2024.. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குப் போகும்.. பக்தர்களுக்கு அறைகள் ரெடி!

news

மாமா மாமா உன்னைத்தானே.. திண்ணையில் அமர்ந்து கீரை ஆய்ந்தபடி.. அசத்தலாக பாடும் பெண்!

news

35 வருஷமாக.. ஆனால் முதல் முறையாக இப்போது எனக்காக பிரச்சாரம் செய்கிறேன்.. பிரியங்கா காந்தி

news

வயநாடு இடைத்தேர்தல்.. ஆயிரக்கணக்கானோருடன் பேரணி.. பிரியங்கா காந்தி வேட்பு மனு தாக்கல்

news

தவெக மாநாடு.. அரை மணி நேரம், ஒரு மணி நேரம் இல்லை நண்பா.. 2 மணி நேரம் பேசப் போறாராம் விஜய்!

news

சுவையான கொங்கு நாட்டு நெல்லிக்காய் தொக்கு.. சூப்பரா இருக்கும்.. செஞ்சு பாக்கலாமா?

news

சென்னை கோயம்பேடு சந்தையில் எந்த காய் என்ன விலை?... இதோ முழு விபரம்...!

அதிகம் பார்க்கும் செய்திகள்