திருமலா பால் விலை ஏறிருச்சு.. புது ரேட் என்ன தெரியுமா.. முதல்ல இதைப் படிங்க!

Apr 04, 2023,12:52 PM IST
சென்னை: தமிழ்நாட்டில் தனியார் பால் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்துள்ளன.

சீனிவாசா, திருமலா, ஜெர்சி ஆகிய நிறுவனங்கள் பால் விலையை லிட்டருக்கு ரூ. 3 முதல் 4 வரை உயர்த்தியுள்ளன.

அரை லிட்டர் சீனிவாசா பாலின் புதிய விலை ரூ. 37 ஆகும். ஒரு லிட்டர் பால் விலை ரூ. 72 ஆக உயர்ந்துள்ளதாக சீனிவாசா பால் தயாரிப்பாளரான ஸ்ரீரஹ்கம் பால் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.



அரை லிட்டர் திருமலா பால் விலை ரூ. 37 ஆகவும், ஒரு லிட்டர் ரூ. 74 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் தெரிவித்துள்ளது. ஜெர்சி பால் விலை அரை லிட்டருக்கு ரூ.33 ஆகவும், ஒரு லிட்டர் பால் ரூ. 66 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல தயிர், மோர், பக்கட் தயிர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையும் ரூ. 4 முதல் 40 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமுல் பால் விலை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது தனியார் பால் விலையும் உயர்ந்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. மொத்தமாக முடிச்சு விட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.. சென்னைக்கு 5வது தோல்வி!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்