மாணவர்களால் சரமாரியாக சூறையாடப்பட்ட... வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது!

Aug 06, 2024,06:27 PM IST

டாக்கா: வங்கதேச நாடாளுமன்றத்தைக் கலைத்து அந்த நாட்டு ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீன் உத்தரவிட்டுள்ளார். ராணுவம், அரசியல் கட்சிகள், மாணவர் இயக்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார் ஜனாதிபதி.


முன்னதாக இன்று மாலை 3 மணியுடன் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று போராட்டத்திலும், கலவரத்திலும் ஈடுபட்டுள்ள மாணவர் இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்தே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டார்கள்.




மாணவர்கள் போராட்டம் வன்முறையாகவும், கலவரமாகவும் மாறிய நிலையில் தற்போது மோசமானதொரு சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திற்குள் நேற்று புகுந்த மாணவர்கள் அதை சூறையாடி விட்டனர். நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து அதை சேதப்படுத்தியுள்ளனர். அதேபோல ஷேக் ஹசீனா வீட்டுக்குள்ளும் புகுந்து வீட்டையே சூறையாடி விட்டனர். ஷேக் ஹசீனா குடும்பத்தினரின் பொருட்களையெல்லாம் தூக்கிச் சென்று விட்டனர். அவர்கள் பயன்படுத்தி உள்ளாடைகளைக் கூட விடாமல் எடுத்துச் சென்று அநாகரீகமாக அதை காட்டி நடனமாடியது உலக மக்களிடையே பெரும் முகச் சுளிப்பை ஏற்படுத்தியது.


இந்த நிலையில்தான் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. வங்கதேச இடைக்கால அரசுக்கு நோபல் பரிசு வென்றவரான முகம்மது யூனிஸ் தலைமை தாங்க வேண்டும் என்று மாணவர் இயக்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. மாணவர்கள் வசம் இப்போது நாடு போய் விட்டதால் இதை ஜனாதிபதி கேட்டாக வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. மேலும் ராணுவத்தின் ஆட்சியையும் மாணவர்கள் விரும்பவில்லை.


இதுகுறித்து நஹீத் இஸ்லாம் என்ற மாணவர் தலைவர் கூறுகையில் ராணுவத்தின் ஆதரவுடனோ அல்லது ராணுவத்தின் தலைமையிலோ அரசு அமைந்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். முகம்மது யூனிஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அவருடன் நாங்கள் பேசி விட்டோம். அவரும் சம்மதித்து விட்டார் என்று கூறினார்.


நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருப்பதால் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசு வரும் வரை வங்கதேசம் கொதி நிலையிலேயே இருக்கும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

news

தமிழாசிரியர் பணி.. இந்தி, சமஸ்கிருதம் எப்படி விரும்பத்தக்க தகுதியாக முடியும்?... சு.வெங்கடேசன்

news

என்னா சேட்டை பாருங்க.. சத்துணவு முட்டையை வைத்து ஆம்லேட் போட்ட திருச்சி ஹோட்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்