ஒரே ஆண்டில் 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு

Mar 30, 2024,01:38 PM IST

புதுடில்லி:  எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகியோருக்கு இன்று நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு.


இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதாக பாரத ரத்னா விருது கருதப்படுகிறது. மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களைப் பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.  இந்தாண்டிற்கான இந்த விருது வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. எல்.கே.அத்வானி, நரசிம்மராவ், சரண்சிங், எம்.எஸ்.சுவாமிநாதன், கர்பூரி தாகூர் ஆகிய 5 பேருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு இந்த விருது இந்தாண்டு தான் வழங்கப்பட்டுள்ளது.




சமீபத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் சார்பில் அவரது மகன் பி.பி பிரபாகர்  ராவ் பெற்றுக் கொண்டார். சரண் சிங் சார்பில்,  அவரது பேரன் ஜெயந்த் செளத்ரி, குடியரசு தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.  பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம். எஸ். சுவாமிநாதனுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் கடந்த ஆண்டு காலமான நிலையில் அவரது மகள் நித்யா ராவ் விருதினை பெற்றுக்கொண்டார். 


மறைந்த பீகார் மாநில முன்னாள் முதல்வரும் சோஷலிச  தலைவருமான  கர்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.இந்த நடைபெற்ற விழாவில் அவரது மகன் ராம்நாத் தாகூர் பெற்றுக் கொண்டார்.வயது மூப்பு காரணமாக பாஜக மூத்த தலைவர் அத்வானி ஜனாதிபதி மாளிகைக்கு வர முடியாததினால், அவருக்கு இந்த விருது அவரது வீட்டில் சென்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், குடியரசுத்  துணைத் தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்