சென்னை: அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ளது. இதில் தேமுதிகவிற்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகரன், பாஜக கூட்டணியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாருக்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அங்கு சிட்டிங் எம்.பியாக காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் களத்தில் இருக்கிறார்.
இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இன்று முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருக்கிறார் என அக்கட்சி அறிவித்துள்ளது. இன்று முதல் அனல் பறக்கும் பிரச்சாரத்தை ஆரம்பிக்க உள்ள பிரேமலதா விஜயகாந்த் நீலகிரி, கோவை, திருப்பூர் ஈரோடு, போன்ற மக்களவைத் தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிக, புதிய தமிழகம், எஸ் டி பி ஐ, ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் தீவிர பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.
ஏற்கனவே தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி .. ராசியான கூட்டணி.. என பரப்புரை மேற்கொண்டது நினைவிருக்கலாம். எம்ஜிஆர் - ஜெயலலிதா - விஜயகாந்த் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசியோடு அதிமுக - தேமுதிக கூட்டணி களம் காண்பதாகவும் அவர் கூறியுள்ளார். அவரது பிரச்சாரத்தால் தேமுதிகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}