சென்னை: கோரதாண்டவம் ஆடி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டது புயல். தற்பொழுது சென்னையை கடந்த நிலையில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் கடந்த 2 நாட்களாக புயல் வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையே கடல் போல் கட்சியளித்தது. மின்சாரம் தடை, சாலைகளில் வெள்ளம், வீடுகளில் வெள்ள நீர் தேக்கம், ரோடுகளில் திடீர் பள்ளம், சாலை போக்குவரத்து பாதிப்பு, விமான போக்குவரத்து பாதிப்பு, ரயில் போக்குவரத்து பாதிப்பு, அவசர தேவைகளுக்கு கூட வெளியில் வர முடியாத நிலை உள்ளிட்ட பல பிரச்சனைகளில் சிக்கி மக்கள் தவித்து வந்தனர் .இந்நிலையில் சென்னையை கதறவிட்ட புயல் சென்னையை விட்டு ஆந்திராவிற்கு சென்றதால் சென்னை மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று மழை நின்றுள்ளது. மழை நின்றாலும் புயல் விட்டுச் சென்ற பாதிப்பு மட்டும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் தொய்வின்றி நடந்து வருகின்றன. முழுவீச்சில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் குறிபிட்ட இடங்களில் மழைநீர் வடியாமல் இருப்பதினால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சாலை மறியல் ஈடுபட்டு வரும் பகுதிகளிலில் மீட்பு குழுவினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
சாலை போக்குவரத்து குறிப்பிட்ட பகுதிகளில் தொடங்கியுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. புறநகர்களில் சரிவர மின்சாரம் வரவில்லை. சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் தான் விமானங்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறாக சென்னை இயல்பு நிலயை நோக்கி திரும்பி வருகிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}