திருவண்ணாமலை: பெளர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாலைக்கு இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருவண்ணாமலையில் உள்ள 14 கிலோமீட்டர் தொலைவிலான கிரிவலப் பாதையில் மாதம் தோறும் பௌர்ணமி நாட்களில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள். அருணாச்சலேஸ்வரர், அம்மனை வழிபட்டு செல்வதால் செல்வம் செழிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில் மார்கழி மாத பௌர்ணமி செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன் கிழமை வரை இருப்பதால், அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் 20 சொகுசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பயணிகள் www.tnstc.in மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் செயலிகள் மூலம் முன் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தின் 365 நாளும் மலை வலம் வரலாம் என்றாலும், பௌர்ணமியில் வரும் மலை வலம் மிகச் சிறப்புடையதாக கருதப்படுகிறது. அதனால் பக்தர்கள் அனைவரும் பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் வருகின்றனர். இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி சிவ புராணத்தையும் பாராயணம் செய்தபடி கிரிவலம் வர வேண்டும்.
பெளர்ணமியில் கிரிவலம் வந்தால் பற்பல நன்மைகள் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். இதனால், பெளர்ணமி மலைவலம் சித்தர்களால் சிறப்பாக போற்றப்படுகிறது. தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகளவில் வரும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா
14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை
தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!
400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!
தமிழகத்தில்.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!
விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!
குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!
{{comments.comment}}