Ponga special buses.. 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்!

Jan 13, 2025,05:18 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை எதிரொலியாக, கடந்த மூன்று நாட்களில் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது.


தமிழர் திருநாளாம் தைத்திருநாள் நாளை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களான ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள காளைகளும் காளையர்களும் தயாராகி வருகின்றனர். மறுபக்கம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக மக்கள் வீடுகளை தூய்மை செய்வது, வண்ணம் பூசுவது, வீட்டை அலங்கரிப்பது,பொங்கலுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது என மக்கள் பிசியாக பரபரப்பாக இயங்கிக் கொண்டு வருகின்றனர். 




இதற்கிடையே பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக மக்கள் கடந்த சனிக்கிழமை முதலே பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையங்களையும் முற்றுகையிட துவங்கிவிட்டனர். அதே சமயம் தொடர் விடுமுறை என்பதால் மக்கள் தங்கள் பொழுதுகளைக் கழிக்க சுற்றுலா தலங்களுக்கும் செல்கின்றனர். 


சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், கிளாம்பாக்கம்,ஆகிய பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருப்பினும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக  அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதோடு, பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு  வருகிறது.மக்கள் பாதுகாப்பான போக்குவரத்து சேவையை பயன்படுத்தி பயணம் செய்து வருகின்றனர்.


பொங்கல் விடுமுறை நாளை தான் துவங்க உள்ளது. இருந்தாலும்கூட முன்கூட்டியே  மக்கள்  அரசு பேருந்துகளில் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் எவ்வளவு பேர் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர் என்ற தகவலை தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. 


அதன்படி பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு கடந்த மூன்று நாட்களில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளை விட கூடுதலாக 11,463 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 465 பேர் பயணம் செய்துள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிக அளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். காலையிலிருந்தே பேருந்து நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்.. எல்லோருக்கும் லீவு .. மறக்காம ஓட்டுப் போடுங்க.. கலெக்டர் அழைப்பு!

news

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சூழல் மன்றங்கள்.. விரைவில் கொள்கை முடிவு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

No Uppuma.. பிரியாணியும் சிக்கன் பிரையும் வேணும்.. கலகலக்க வைத்த கேரள சிறுவன்.. அமைச்சர் சொன்ன பதில்

news

மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு நேற்று குறைந்த தங்கம் விலை.. மீண்டும் அதிரடியாக இன்று உயர்வு

news

Valentine's day: உங்களோட X-ஐ கடுப்பாக்கணுமா.. காத்திருக்கும் கரப்பான் பூச்சிகள்.. அமெரிக்காவில் கலகல

news

மதுரை.. இந்து முன்னணி போராட்ட அறிவிப்பு எதிரொலி.. போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் திருப்பரங்குன்றம்!

news

சந்திரபாபு நாயுடு, ஏக்நாத் ஷிண்டேவுக்கு கை கொடுத்த ராபின் சர்மா..தமிழ்நாட்டுக்கு அழைத்து வரும் திமுக

news

Kaantha: எம்.ஆர். ராதா மாதிரி.. புதிய அவதாரத்தில் துல்கர் சல்மான்.. ராணாவுடன் இணைந்து தயாரிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்