பொங்கல் ஸ்பெஷல்: 13, 14 தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Jan 12, 2023,09:11 PM IST
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் 3 நாட்களுக்கு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளன. 

பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது. 14ம் தேதி போகி கொண்டாடப்படும். 15ம் தேதி தைப் பொங்கல் விழா கொண்டாடப்படும். 16ம் தேதி மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படும்.

பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்:



ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய இரு நாட்கள் இரவு நேர கடைசி ரயில் சேவை  நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுகிறது. வழக்கமாக பீக் ஹவர் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் சேவை இரவு 8 மணி வரை இயக்கப்படும். அந்த சேவையானது இந்த இரு நாட்களுக்கும் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.

ஜனவரி 18ம் தேதி ஒரு நாள் மட்டும் காலை நேர சேவை 5 மணிக்குப் பதில் 4 மணிக்கே தொடங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்