சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தைத் திங்கள் முதல் நாள் தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளாகவும், தமிழ்ப்புத்தாண்டாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விழாவையொட்டி வீடுகள் தோறும் சர்க்கரைப் பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்குப் படையல் வைத்து மக்கள் குடும்பத்தோடு சாமி கும்பிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
பொங்கல் விழா என்பது அனைத்து மதத்தினராலும், சாதி சமயப் பாகுபாடில்லாமல் கொண்டாடப்படும் ஒரு முக்கிய விழாவாகும். பல ஊர்களில் பல்வேறு மதத்தினர், ஜாதியினர் கூடி சமத்துவப் பொங்கலும் கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சிகள் சார்பிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மதுரையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதேபோல பல்வேறு கிராமங்கள், ஊர்களிலும் விதம் விதமான பொங்கல் விளையாட்டுக்களுடன்மாநிலமே களை கட்டிக் காணப்படுகிறது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் சங்கராந்தி விழாவாக இது கொண்டாடப்படுகிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!
குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!
{{comments.comment}}