வெள்ளத்திலிருந்து மீண்ட தூத்துக்குடியில்.. பொங்கல் விழா.. வேட்டி சேலையில் கலக்கிய வெளிநாட்டவர்!

Jan 04, 2024,03:59 PM IST

தூத்துக்குடி: இந்தியாவிற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டினர் வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். விழா எங்கு நடந்தது தெரியுமா.. சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கி மீண்டுள்ள தூத்துக்குடியில்தான்.


தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த ஆஸ்திரேலியா, இத்தாலி உள்ளிட்ட வெளிநாட்டவர்கள்  தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அதுவும் ஆண்கள் வேட்டி, சட்டை அணிந்தும் பெண்கள் சேலை அணிந்து மண்பானையில் பொங்கல் வைத்து பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து இந்திய கலாச்சாரத்தை அறிந்து கொள்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியா வருவது இயல்பு. இவர்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று சுற்றிப் பார்த்து வருவார்கள். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்கள், கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பழகி வருவார்கள் மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படங்களையும் எடுத்துக் கொள்வார்கள். இதன் மூலம் இந்திய பண்பாடு கலாச்சாரங்களை அறிந்து கொள்கின்றனர்.




அந்த வகையில் ஜெர்மனி, இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 19 பெண்கள் உட்பட 47 பேர் சென்னை வந்தனர். அங்கிருந்து கடந்த 28ஆம் தேதி 20 ஆட்டோவில் பயணத்தை தொடங்கிய இவர்கள் புதுச்சேரி, தஞ்சை, மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தனர். விதவிதமான வண்ணங்களில் ஆட்டோக்களை அலங்கரித்து இருந்தனர். 


அவர்கள் கலாச்சார ஆடைகள் அணிந்து  தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலயம், மணப்பாடு, திருச்செந்தூர் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு சென்று பார்வையிட்டனர். இறுதியாக தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரத்திற்கு சென்று, அங்குள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர். அப்பொழுது 20 மண்பானைகளில் பொங்கல் வைத்தனர். இதற்காக, வெளிநாட்டினர் தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தினர். ஆண்கள் வேஷ்டி துண்டும், பெண்கள் சேலைகளையும் அணிந்திருந்தனர். அந்தப் பகுதியில் கரும்பு வாழையால் தோரணங்கள் அமைத்து, மஞ்சள் குழை, பழம், பனங்கிழங்கு படைத்து பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.


இது குறித்து வெளிநாடு சுற்றுலா பயணி ஒருவர் கூறுகையில், தமிழ்நாட்டில் கலாச்சாரம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. மக்கள் உற்சாகமாக எங்களை வரவேற்றனர். மண் பானையில் பொங்கல் இடுவது வித்தியாசமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என்று கூறினார். இந்த சுற்றுலா குழுவினர் இன்று நெல்லை செல்கின்றனர். அங்கிருந்து 6ஆம் தேதி திருவனந்தபுரம் சென்று பயணத்தை நிறைவு செய்கின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்