ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை சோதனையிட்ட தேர்தல் பறக்கும் படையினர்

Apr 15, 2024,01:45 PM IST

சென்னை : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயணம் செய்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தி, இந்த முறையும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவில் கேரளா மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ராகுல் காந்தி, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 


ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 22ம் தேதி வரை தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். இதற்காக டில்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை தமிழகம் வந்தார். அப்போது அவர் வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டுள்ளனர். கேரளாவிற்கு பிரச்சாரத்திற்கு வருபவர் எதற்காக தமிழகம் வர வேண்டும். நேரடியாக கேரளாவிற்கே சென்றிருக்கலாமே என அவரிடம் கேள்வி எழுப்பி உள்ளனர். 




ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, திமுக என பாரபட்சம் இன்றி பல விஐபி.,க்கள் செல்லும் வாகனங்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் இதுவரை ரூ.4650 கோடி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரும் சோதனை செய்யப்பட்டுள்ளது. 


இன்று ராகுல் மற்றும் பிரதமர் மோடி இருவருமே கேரளாவின் பல பகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். இருவரும் ஒரே நேரத்தில் கேரளாவிற்கு வருவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்

news

காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!

news

ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!

news

ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!

news

அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!

news

Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!

news

"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

news

தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!

news

மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்