சென்னை: தமிழகம் முழுவதும், ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் போலியோ சொட்டு மருந்து முகாம் மார்ச் 3ம் தேதி நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் போலியோ தடுப்பு மருந்துவ முகாம் வருகின்ற மார்ச் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பெற்றோர்கள் தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது தான் போலியோ தடுப்பு முகாம். தமிழக அரசு சார்பில் வருடத்திற்கு இரண்டு முறை இந்த முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதனால் போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறியது.
கடந்த 4 ஆண்டுகளாக, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மொத்தம் 43,051 இடங்களில் 57 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகளின் மையங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனை சாவடிகளில் நடமாடும் வாகனம் மூலம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த முகாமில் பங்கேற்று தங்களது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தவறாது போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ளும் படி பெற்றோர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}