சென்னை: சர்ச்சைக்குரிய சொற்பொழிவு ஆற்றிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர் செய்யப்பட்டார்.
சென்னை அசோக் நகர் பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் சொற்பொழிவு ஆற்றிய விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மகாவிஷ்ணு மீது தொடர்ந்து பல புகார்கள் எழுந்ததால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது புழல் சிறையில் அடைத்தனர்.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட மகாவிஷ்ணுவின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பலத்த பாதுகாப்புடன் அவரை வேனில் கொண்டு வந்து கோர்ட்டுக்குள் அழைத்துச் சென்றது போலீஸ். மகாவிஷ்ணுவை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து மனு செய்துள்ளனர். மறுபக்கம் ஜாமின் கோரி மகாவிஷ்ணு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் விசாரணை தீவிரமடைந்துள்ளது. விரைவில் இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பேரில் அரசு மேல் நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}