சூப்பர்ல.. போலீஸ்னா எப்படி இருக்கணும்.. உங்க கிட்ட யோசனை இருக்கா.. உடனே சொல்லுங்க!

Nov 24, 2023,06:01 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: காவல்துறை பணியினை சிறப்பாகும்  வகையில் என்னவெல்லாம் செயல்படுத்தலாம் என பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுவதாக காவல்துறை அறிவித்துள்ளது.


நாட்டின் மிக முக்கியமான சேவை காவல்துறை பணிதான். ஊரெல்லாம் நிம்மதியாக இருக்க தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றுவோர்தான் காவல்துறையினர். அப்படிப்பட்ட காவல் பணியை அறப்பணி என்று சொல்வார்கள்.


நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்கள் பாதுகாப்பாகவும் ,மன நிம்மதியுடனும், வாழ்வதற்கு காவல்துறை பெரும் பங்கு வகித்து வருகிறது. இந்த நிலையில் காவல்துறையின் பணிகளை எப்படியெல்லாம் சிறப்பாக செயல்படுத்தலாம் என பொதுமக்களிடம் தங்களின் கருத்துக்களை தபால் மூலம் எழுதி அனுப்பலாம் என காவல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

 



இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையின் பணியை செம்மையாக்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு 2022 ஆம் ஆண்டு ஐந்தாவது காவல் ஆணையம் (police commission) அமைத்துள்ளது. இந்க ஆணையமானது, சென்னை அசோக் நகர் காவல் பயிற்சி கல்லூரி அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது. 


காவல் பணியினை செம்மைப்படுத்த பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தபால் மூலம் தெரிவிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் தங்கள் கருத்துக்களை எழுதி அனுப்பலாம்.


அனுப்ப வேண்டிய முகவரி:


தலைவர், 5வது காவல்  ஆணையம் , அசோக் நகர்,  சென்னை -83.


மின்னஞ்சல் அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் :


fifthpolicecommission@gmail.com      


நேரில்  சந்தித்து மனு அளிக்க விரும்புபவர்கள் 05 .12. 2023 அன்று காலையில் 10:30 மணி அளவில் பிற்பகல் 01:30 மணி வரை மேற்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்கலாம்.


மேல் விவரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


கைபேசி எண்: 9791987112

காவல் கண்காணிப்பாளர்,

5வது காவல் ஆணையம்,

அசோக் நகர் ,

சென்னை -83  - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவல்துறை குறித்து உங்களிடம் ஏதாவது யோசனை இருக்கா.. ஆக்கப்பூர்வமான யோசனைகள் இருந்தால் அனுப்பி வையுங்க.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்