17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை செய்ததாக புகார்.. எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

Mar 15, 2024,11:31 AM IST

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


17 வயது சிறுமியும், அவரது தாயாரும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவிடம் உதவி கேட்டு சென்றுள்ளனர். அப்போது அந்த சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று எடியூரப்பா பாலியல் துன்புறுத்தல் செய்தாக புகார் எழுந்துள்ளது. இதை வெளியே கூறக்கூடாது என்றும், கூறினால் பல்வேறு பிரச்சனைகள் எழும் என்று, எடியூரப்பா மிரட்டியதாகவும் சிறுமியின் தாயார் போலீஸில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளார்.  




சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், பெங்களூரு சதாசிவநகர் போலீசார் நேற்று இரவு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இது குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


பிஎஸ் எடியூரப்பா கர்நாடகாவில் 3 முறை முதல்வராக பதவி வகித்தவர். பாஜகவின் மூத்த தலைவர்களுள் முக்கியமானவர். பலம் வாய்ந்த லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவர். 2021ம் ஆண்டு முதல்வர் பதவியில் இருந்து விலகினார் எடியூரப்பா.


18 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களை தடுக்கும் வகையில் மத்திய அரசால் கடந்த 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பா மீது பாய்ந்த இந்த வழக்கால் கர்நாடகவில் உள்ள அரசியல் வட்டாரத்தில் தற்பொழுது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர்  எடியூரப்பா கூறுகையில், "என்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன். புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்