தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சாமி கும்பிட்டார்.. அரிச்சல் முனையிலும் வழிபாடு!

Jan 21, 2024,10:28 AM IST


ராமேஸ்வரம்:  தனுஷ்கோடியில் உள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று வழிபாடு செய்தார். அதேபோல அரிச்சல் முனை கடற்கரைக்கும் அவர் சென்று மலர் தூவி வழிபட்டார். 


தமிழ்நாட்டுக்கு 3 நாள் பயணமாக வந்துள்ள பிரதமர் மோடி இன்று தனது 3வது நாள் பயணத்தைத் தொடங்கினார். காலையில் ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, தனுஷ்கோடிக்குச் சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற கோதண்டராமர் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு சிறப்பு வழிபாடுகளைச் செய்தார்.  இங்கு வில்லேந்திய கோலத்தில் ராமர் சிலை அமைக்கப்பட்டிருக்கும். தற்போது அயோத்தியில் உள்ள ராமர் சிலையும் கூட இதே போலத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.




அதன் பிறகு அங்கிருந்து அவர் அரிச்சல்முனை கடற்பகுதிக்குச் சென்றார். இந்தப் பகுதியிலிருந்துதான் கற்களால் ஆன பாலத்தை இலங்கைக்கு வானரப் படை கட்டியதாக கூறப்படுகிறது. இதுதான் ராமர் பாலம் என்று அழைக்கப்படுகிறது 


அரிச்சல்முனை கடற்கரைக்கு வந்த பிரதமர் மோடி அங்கு மணலில் மலர்களைத் தூவி வணங்கினார். இந்த மலர் அஞ்சலியில் தாமரை மலர்களும் இடம் பெற்றிருந்தன. அதைத் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டுள்ள  அசோக ஸ்தூபிக்கும் மலர் தூவி வணங்கினார் பிரதமர் மோடி.  அதன் பின்னர் டெலஸ்கோப் மூலமாக அரிச்சல் முனையிலிருந்து கடலைப் பார்த்து ரசித்தார் பிரதமர் மோடி.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்