சென்னை டூ கோவை.. தமிழ்நாட்டுக்குள் முதல் வந்தே பாரத் ரயில்.. மோடி தொடங்கி வைக்கிறார்

Mar 22, 2023,01:34 PM IST

சென்னை: சென்னை - மைசூரு இடையிலான வந்தேபாரத் ரயில் சேவை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள நிலையில் தற்போது சென்னைக்கும் கோவைக்கும் இடையே இன்னொரு வந்தே பாரத் ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


இந்தியாவின் அதி வேக ரயில் சேவையாக அறியப்படுவது வந்தே பாரத் ரயில். இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இடையே இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. முதல் ரயில் 2019ம் ஆண்டு தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தொகுதியான வாரணாசிக்கும் இடையே அறிமுகமானது. 




தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னையிலிருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு ஒரு வந்தேபாரத் ரயில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதுதான் தமிழ்நாட்டுக்கான முதல் வந்தே பாரத் ரயிலாகும். தற்போது 2வது ரயிலை மத்திய ரயில்வே துறை வழங்கியுள்ளது. அது கோவைக்கும் - சென்னைக்கும் இடையிலான ரயிலாகும்.


தமிழ்நாட்டுக்கு உள்ளே அறிமுகமாகும் முதல் வந்தே பாரத் ரயில் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில்ச சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 8ம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார். சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி புதியரயிலை தொடங்கி வைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இதே நிகழ்ச்சியில் செங்கோட்டை - தாம்பரம் இடையிலான வாரம் 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார்.


சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்