சென்னையில்.. பிரதமர் மோடி இன்று ரோடு ஷோ.. தியாகராய நகரில்.. ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிப்பு!

Apr 09, 2024,11:47 AM IST

சென்னை: பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இரண்டு நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளனர்.


7வது முறையாக தமிழ்நாட்டுக்கு வரவுள்ளார் பிரதமர் மோடி. சென்னை, நீலகிரி, வேலூர், ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. முதற்கட்டமாக சென்னை தியாகராய நகரில் நடைபெறும் ரோடு ஷோ நிகழ்ச்சியில் இன்று மாலை பங்கேற்க உள்ளார். 


பின்னர் வாகன பேரணியை முடித்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் ரோடு ஷோவில் பிரதமரின் பாதுகாப்பு கருதி பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.


அதன்படி, ரோடு ஷோ நடத்தும் போது, பட்டாசு வெடிக்க கூடாது. .அலங்கார வளைவுகளை அமைக்கக் கூடாது.. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் முழக்கங்களை எழுப்பக்கூடாது.. போன்ற நிபந்தனைகளை காவல்துறை அறிவித்துள்ளது.



போக்குவரத்து மாற்றம்:


பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சென்னை தியாகராயநகர் பகுதிகளில் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மேலும் பிரதமர் செல்லும் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்களையும் காவல்துறை அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி சாலை முதல் அண்ணா சாலை, ஓ.எம்.சி.ஏ வரையிலும், நந்தனம் முதல் தியாகராய நகர் வரையிலும், மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்திற்கு நெரிசல் மிகுந்த பகுதிகளாக அறிக்கப்பட்டுள்ளது. 


இதனால் ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிப்பெட் சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, எஸ்.வி பட்டேல் சாலை, காந்தி மண்டபம் சாலை தியாகராய நகர் சாலை ஆகிய பகுதி சாலைகளில் பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இது தவிர தியாகராய நகர், வி.என் சாலை, ஜி.என் செட்டி சாலை, வடக்கு போக் சாலைகளில் வாகனங்களை நிறுத்தவும் தடை  விதித்துள்ளது.


நாளை வேலூர், நீலகிரி பயணம்:


இன்று சென்னையில் நடைபெறும் வாகன பேரணியை முடித்துவிட்டு, நாளை பிரதமர் நரேந்திர மோடி வேலூர் மற்றும் நீலகிரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். அப்போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்