படகில் சென்று.. திரிவேணி சங்கமத்தில்.. 3 முறை புனித நீராடிய பிரதமர் நரேந்திர மோடி

Feb 05, 2025,06:09 PM IST

பிரயாக்ராஜ்:  உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிரதமர் நரேந்திர மோடி. 


மகாகும்பமேளா என்பது இந்தியாவில் அனைத்து மொழி மக்களையும் ஒன்றிணைக்கும் மிகப் பிரம்மாண்ட விழா. அதிலும் இந்தியாவின் பிரயாக்ராஜ் பகுதியில் அதிக மக்கள் கூடும் மிகப்பிரமாண்ட விழாவாக யுன்ஸ்கோ அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படும் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் புனிதர்கள், பண்டிதர்கள், ஞானிகள், போகிகள், மக்கள், தலைவர்கள் என கோடிக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் அரிய நிகழ்வாகும்.  அந்த நன்னாளில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். 

பக்தர்கள் சிவலோகப் பதவியை அடைவார்கள் என இந்துக்கள் கருதுகின்றனர்.


இதனால் புனித விழாவாக கருதப்படும் கும்பமேளா ஒவ்வொரு வருடம் 12 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. ஆனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் மகா கும்பமேளா மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் 144 வருடங்களுக்குப் பிறகு வரும் கும்பமேளாவை இந்த ஆண்டு  சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது.  அதன்படி இந்த மகா கும்பமேளா 2025 ஆம் கடந்த மாதம் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி நிறைவடைகிறது. 




இரண்டு, மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு காணும் அரிய நிகழ்வாக 144 வருடங்களுக்கு ஒருமுறை வரும் இந்த மகா கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான நாட்டு மக்கள், தலைவர்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதுவரைக்கும் 38.2 கோடிக்கும்  அதிகமான மக்கள் புனித நீராடி உள்ளனர். இன்னும் வரும் நாட்களில் மேலும் புனித நீராடுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த மகா கும்பமேளாவில் பக்தர்கள் சிரமமின்றி கலந்து கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 1700 ஹெக்டர் பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துமிடம், 2250 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணி நேரமும்  கண்காணிப்பு பணிகள் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 


முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்கள் பாதுகாப்பாக புனித நீராடி வரும் நிலையிலும் கூட தை அமாவாசை அன்று கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே இடத்தில் திரண்டது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 


இதனை அடுத்து மேலும் பாதுகாப்பு தீவிர படுத்தப்பட்டு ஒரு நாளைக்கு குறைந்த அளவிலேயே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த மகா கும்பமேளாவில் பல்வேறு தலைவர்கள், தொழிலாளிகள், வெளிநாட்டு தலைவர்கள், என பலர் கலந்துகொண்டு புனித நீராடி உள்ளனர். நேற்று பூட்டான் அரசர் புனித நீராடினார். அவருடன் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் நீராடினார்.


அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார். முன்னதாக டெல்லியில் இருந்து இன்று காலை புதன்கிழமை  பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவுக்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி. பிறகு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அவருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பங்கேற்றார். இதற்காக சிறப்பு பாதுகாப்பு படையினர் கட்டுப்பாட்டின் கீழ் பிரயாக்ராஜ் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!

news

Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?

news

என்னென்ன காயெல்லாமோ சாப்பிட்டிருப்பீங்க.. தோசைக்காய பப்பு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா..!

அதிகம் பார்க்கும் செய்திகள்