சர்தார்  வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்... பிரதமர் மோடி மரியாதை

Oct 31, 2023,12:26 PM IST

அகமதாபாத்: இந்தியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


குஜராத் மாநிலத்தில் 1875ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி பிறந்தவர் சர்தார்  வல்லபாய் பட்டேல். அவர் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களுள் முக்கியமானவர் படேல். வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழியில் போராட்டம் நடத்தியவர். 


சர்தார் வல்லப்பாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியாவார்.  இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கிய பங்காற்றியவர். சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் இருந்தவர். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்ற சிறப்புக்குரியவர்.




ஒற்றுமையை வலியுறுத்தும் பொருட்டு உலகிலேயே மிகப்பெரிய சர்தார் வல்லபாய் படேல் சிலை நர்மதா நதிக்கரையில் அமைக்கப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், குஜராத்தில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கவுள்ளார். 


படேல் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், தொலைநோக்குப் பார்வை மற்றும் நமது தேசத்தின் தலைவிதியை அவர் வடிவமைத்த அசாதாரண அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாங்கள் நினைவுகூருகிறோம். தேசிய ஒருமைப்பாட்டிற்கான அவரது அர்ப்பணிப்பு எங்களுக்கு தொடர்ந்து வழிகாட்டுகிறது. அவரது சேவைக்கு நாங்கள் என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.


டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.


காங்கிரஸ் கட்சி சார்பில், மூத்த தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்திஆகியோர் மலர் தூவி மாரியதை செலுத்தினர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்