இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யூபிஐ சேவை.. தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

Feb 12, 2024,04:33 PM IST

டெல்லி: இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் யூபிஐ முறையில் பணப் பரிமாற்ற  சேவையை காணொளி மூலம் இன்று  தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.


காணெொளி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மொரீசியஸ் பிரதமர் பிரவீன் ஜெகன்நாத்,  இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


வெளிநாடுகளில்  பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் சிரமம் இன்றி பண பரிவர்த்தனை செய்யும் நோக்கில் வெளிநாடுகளில் யூபிஐ சேவையை அறிமுகப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  பல வங்கி கணக்குகளை ஒரே மொபைல் செயலி மூலம் எளிதாக பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு யுபிஐ மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது. 




இந்தியாவில், டிஜிட்டல் பண பரிவர்த்தனை தற்போது அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது என்றே சொல்லலாம்.

அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் ஏற்கனவே யூபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்வதற்கான வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனை அடுத்து இலங்கை, மொரீசியஸ் நாடுகளும் யூபிஐ மூலம் பணம் செலுத்தம் நாடுகளின் பட்டியலில் சேர்ந்துள்ளது. இலங்கை மற்றும் மொரீசியஸ்  நாடுகளில் பணப்பரிவர்த்தனைகளுக்காக யுபிஐ தொழில்நுட்ப சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியா.


அது மட்டுமில்லாமல் மொரீசியஸ் நாட்டில் ரூபே கார்டு சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.  இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் யுபிஐ சேவையின் மூலம் இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளுக்கு பயணிக்கும் இந்திய பயணிகளும் மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கும் இந்த சேவை பயன்படுத்த முடியும். இலங்கை மற்றும் மொரிசியஸ் ஆன இந்தியாவின வலுவான கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் வேகமாக மற்றும் தடையற்ற டிஜிட்டல் பணி பரிவர்த்தனை அனுபவத்தின் மூலம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

தோனி அதிரடி.. கடைசி நேர போராட்டம் வீண்.. மீண்டும் ஒரு தோல்வி.. ஏமாற்றத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்

news

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்டவிரோதம்.. உச்சநீதிமன்றம்

news

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்.. இனி முதல்வர் ஸ்டாலினே பல்கலைக்கழக வேந்தர்.. பி.வில்சன்

news

உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது .. துணைவேந்தர்களை உடனே நியமிக்க வேண்டும்.. டாக்டர் ராமதாஸ்

news

Tamil Nadu leads.. பேரறிவாளவன் வழக்குக்குப் பின்.. சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்திய உச்சநீதிமன்றம்!

news

ஆளுநருக்கு எதிரான.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது‌.. முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

news

Summer Food tips.. அடிக்கும் அதிரடி வெயிலுக்கு.. கருப்பு கவுனி அரிசி மோர் கூழ் சூப்பரப்பு!

news

ஏப்ரல் 10.. சம்பவம் காத்திருக்கு.. குட் பேட் அக்லி படத்திற்கு.. யுஏ சான்றிதழ்.. ரசிகர்கள் வெயிட்டிங்

news

ஆளுநர் ஆர்.என். ரவியை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்: திருமாவமவன்!

அதிகம் பார்க்கும் செய்திகள்