கொல்கத்தா: நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதேபோல ஆக்ரா மெட்ரோ ரயில் சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்தியா முழுவதும் 27 நகரங்களில் மெட்ரோ திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய நிதியுதவியுடன், மாநில அரசுகளும் இணைந்து இதை செயல்படுத்துகின்றன. தினசரி ஒரு கோடிக்கும் மேலான பயணிகள் மெட்ரோ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த மெட்ரோ சேவை சமீப காலமாக பயணிகளின் அத்தியாவசிய தேவையாக மாறி வருகிறது.
விரைவாக செல்லுதல், போக்குவரத்து நெரிசல் இல்லாதது, சொகுசு பயணம், சுத்தமான உட்புற அமைப்பு, பயணிகளைக் கவரும் மெட்ரோவின் வடிவமைப்பு உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ திட்டம் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், மெட்ரோ திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆக்ரா மெட்ரோ ரயில் இரண்டு பாதைகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த நீளம் 29.65 கிலோமீட்டர். இது தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை, சிக்கந்திரா, ஐ எஸ் பி டி, ராஜா கி மண்டி ரயில் நிலையம், மருத்துவக் கல்லூரி, ஆக்ரா ரயில் நிலையம், உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்களை இணைக்கும் ரயில் திட்டம் ஆகும்.
கொல்கத்தாவில் நீருக்கடியில் மெட்ரோ பாதை
இதேபோல கொல்கத்தா மெட்ரோவில் புதிய சாதனையாக, நீருக்கடியில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்ததிட்டம் நகர்ப்புற போக்குவரத்தில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதை இன்று பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
ஹூக்ளி ஆற்றின் கீழ் பூமிக்கு அடியில் சுமார் 50 அடி ஆழத்தில் மெட்ரோ சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயில் சேவை ஹவுரா மைதானம் முதல் எக்ஸ்பிளனேடு வரை செல்லும். இது 16.6 கிலோ மீட்டர் தூரத்தில் நீருக்கடியில் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதே விழாவில் ஆக்ரா மெட்ரோ திட்டத்தையும் பிரதமர் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தாஜ்மஹால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வர வசதியாக மார்ச் 6 2024 முதல் இந்த மெட்ரோ ரயில் சேவை செயல்பாட்டில் வந்துள்ளது.
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
சபரிமலையில் நடிகர்கள் கார்த்தி ரவி மோகன் சுவாமி தரிசனம்!
Today gold rate: வரலாறு காணாத தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
வக்பு சட்டத்தை கண்டித்து.. கடை அடைப்பு போராட்டம் நெல்லையில் பரபரப்பு..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்
குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!
good friday 2025 : புனித வெள்ளிக்கு ஏன் இந்த பெயர் வந்தது தெரியுமா?
{{comments.comment}}