டெல்லி: மகளிர் தினத்தையொட்டி வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் விலை உச்சத்தில் உள்ளது. இதைக் குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதைத் தொடர்ந்து விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்டில், இன்று மகளிர் தினம். வீட்டுஎரிவாயு சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது கோடிக்கணக்கான குடும்பங்களின் நிதிச்சுமையைக் குறைக்க உதவும். குறிப்பாக பெண்களுக்கு இது பலன் தரும்.
வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைப்பதன் மூலம் குடும்பங்களின் நலனைப் பாதுகாக்கும் முயற்சியில் நாங்களும் தோள் கொடுக்கிறோம். மேலும் சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்தவும் இது உதவும். பெண்களை சக்தி படைத்தவர்களாக மாற்ற வேண்டும், அவர்களது வாழ்க்கை எளிதாக வேண்டும் என்ற எங்களது உறுதியில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்பதை இது வெளிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}