புது டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதத்தில் ஈடுபட வேண்டும். கூட்டத்திற்கு இடையூறு செய்யக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். ஆனால் இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
2024- 25 நிதி ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரையுடன் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
நாடாளுமன்ற விவாதங்கள் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும். விவாதங்கள் தீவிரமாக இருக்கலாம். இடையூறு செய்வதாக இருக்கக் கூடாது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகத்தை சிறுமைபடுத்த கூடாது.
நாட்டில் பெண் சக்தியின் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் நாடு வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. பெண் குடியரசுத் தலைவர் புதிய நாடாளுமன்றத்தில் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை தொடங்கி வைத்துள்ளார். நாளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செயயவுள்ளார் என்று கூறினார் பிரதமர் மோடி.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!
ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?
பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!
சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!
வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி
என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!
அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!
நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!
{{comments.comment}}