சென்னை: தமிழகத்திற்கு இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவையை காணொளி வாயிலாக 31ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டில் மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. அதிலும் இதன் பயண செலவு மிகமிக குறைவு என்பதால் பேருந்துகளை விட ரயில்களையே மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். இதனால் நீண்ட தூரம் பயணிக்க ரயில்கள் மிகவும் சௌகரியமாக இருப்பதாலும் மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த வந்தே வாரத் ரயில் சேவை மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைவதால் இந்த ரயில்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு எழுந்து வருகின்றது. அதன்படி தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் பல்வேறு வந்தே பாரத் ரயில் சேவைகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதில் நாகர்கோவில் டூ சென்னை எழும்பூர், மதுரை டூ பெங்களூர் கண்டோமென்ட் என இரண்டு புதிய வந்தே பாரத் ரயில் சேவை வரும் 31ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறுகையில், சென்னை - நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை புதன்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்படும். அதேபோல் பெங்களூர் டூ மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவை செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்களும் இயக்கப்பட உள்ளது. இந்த இரண்டு ரயில் சேவைகளையும் வரும் 31ஆம் தேதி முதல் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் திட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களையும் பிரதமர் அன்று தொடங்கி வைக்க இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}