"இந்தியன் முஜாஹிதீன்.. உருப்படாத கூட்டணி".. எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

Jul 25, 2023,01:04 PM IST

டெல்லி: இது உருப்படாத கூட்டணி. தோற்றுப் போன, சோர்வடைந்து போன, நம்பிக்கை இழந்து விட்ட, என்னை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எதிர்க்கட்சிகளின் புதிய கூட்டணி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


"இ.ந்.தி.யா." என்ற பெயரில் புதிய கூட்டணியை எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ளன. இந்தக் கூட்டணியின் தலவராக சோனியா காந்தியை அறிவித்து செயல்பட்டு வருகின்றனர். இந்தக் கூட்டணி குறித்து தேசிய அளவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகின்றன.


இந்த நிலையில் இந்தக் கூட்டணி உருவானது முதலே பாஜகவினர் கடுமையாக விமர்சித்தும் கேலி கிண்டல் செய்தும் வருகின்றனர். இதுவே எங்களுக்கு வெற்றி என்று எதிர்க்கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி இந்த கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


பாஜக நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் இவ்வாறு சாடியுள்ளார். இதுகுறித்து அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் கூட்டணியை, இலக்கில்லாத ஒன்று, இந்தியன் முஜாஹிதீன் என்று வர்ணித்துள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு போன்றதுதான் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி என்றும் பிரதமர் விளாசினார்.


இப்படி ஒரு இலக்கற்ற எதிர்க்கட்சிக் கூட்டத்தை நான் ஒரு போதும் பார்த்ததில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார் . பிரதமர் மேலும் கூறுகையில், இந்தியா என்ற பெயரை வைத்துக் கொண்டதற்காக அவர்களே அவர்களைப் பாராட்டிக் கொள்கின்றனர். இந்திய தேசிய காங்கிரஸ், ஈஸ்ட் இந்தியா கம்பெனி, இந்தியன் முஜாஹிதீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா.. இதிலும் கூடத்தான் இந்தியா என்ற பெயர் இருக்கிறது. இந்தியா என்ற பெயரை வைத்து விட்டால் போதுமா.. ! இந்தியா என்ற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்ற முடியாது. 


இந்த கூட்டணி தோல்வி அடைந்தவர்களால், சோர்ந்து போனவர்களால், நம்பிக்கை இழந்தவர்களால் உருவாக்கப்பட்ட கூட்டணி. மோடியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களது ஒரே குறிக்கோள். அவர்கள் கடைசி வரை எதிர்க்கட்சிகளாகவே இருக்கவேண்டும் என்று முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. பாஜக 2024 லோக்சபா தேர்தலில் மக்கள் ஆதரவுடன் மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றார் பிரதமர் மோடி.


எதிர்க்கட்சிகளின் கூட்டணியை இந்தியன் முஜாஹிதீன் என்று பிரதமர் வர்ணித்திருப்பதாக மத்திய அமைச்சர் கூறியுள்ளது எதிர்க்கட்சிகளிடையே புதிய சலசலப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்