டெல்லி: சமூக வலைதளங்களில் தங்களது பெயர்களுடன் மோடி பரிவார் அல்லது மோடி குடும்பம் என்று இணைத்து எனக்கு ஆதரவு கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி. இனி அதை எடுத்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடியின் குடும்பம் குறித்து எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்டது. இதற்கு மோடி பதிலளிக்கையில், இந்து நாடும், நாட்டு மக்களும்தான் எனது குடும்பம் என்று கூறியிருந்தார். இதையடுத்து பாஜகவினர் மற்றும் பாஜக அநுதாபிகள் சமூக வலைதளங்களில் தங்களது பெயருக்குப் பின்னால் இந்தியில் மோடி பரிவார் என்றும் தமிழில் மோடி குடும்பம் என்றும் குறிப்பிட ஆரம்பித்தனர். இது வைரலானது.
இந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இந்தப் பெயர்களை எடுத்து விடலாம் என்று பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தேர்தல் பிரச்சாரம் முழுவதும் இந்தியா முழுவதும் மக்கள் மோடி பரிவார் என்ற பெயரை தங்களது பெயருடன் இணைத்து எனக்கு ஆதரவாக இருந்தனர். இது எனக்கு பெரும் பலத்தைக் கொடுத்தது. இப்போது இந்திய மக்களின் ஆதரவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் 3வது முறையாக ஆட்சியமைத்துள்ளது. மக்களுக்காகவும், தேசத்திற்காகவும் எனக்குப் பணியாற்ற மக்கள் அனுமதி அளித்துள்ளனர்.
இந்திய மக்கள் தங்களது சமூக வலைதளத்தில் இணைத்துக் கொண்ட மோடி பரிவார் என்ற பெயரை இனிமேல் எடுத்து விடலாம் என்று கருதுகிறேன். பெயர் மட்டும்தான் நீங்குகிறது. ஆனால் நமது பந்தம், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக இணைந்து பாடுபடப் போவது எப்போதுமே மாறாது, இறுக்கமாகவே இருக்கும் என்று கூறியுள்ளார் மோடி.
மதுரையை வச்சு செய்யும் வெயில்.. மேலும் சில நாட்கள் வெளுக்குமாம்.. அதிகரிக்கவும் வாய்ப்பு.. கேர்ஃபுல்
காட்டுத் தீயாய் பரவிய துணை முதல்வர் வதந்தி.. சிரித்துக் கொண்டே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்!
ஜிம்பாப்வேயை உலுக்கும் பஞ்சம்.. அதை விரட்ட அரசு எடுத்த முடிவு.. .. அதிர்ச்சியில் நாடுகள்!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகளை ஏற்றது மத்திய அமைச்சரவை!
அழகாய் பூத்தது.. நீலகிரியில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் நீலக்குறிஞ்சி சீசன் தொடங்கியது!
Thalaivettiyan Palayam: ஜிபி முத்து கொடுத்த சூப்பர் ஐடியாஸ்.. கூலாக கேட்டுக் கொண்ட அபிஷேக் குமார்!
"பாட்டி கதியே உங்களுக்கும்".. ராகுல்காந்திக்கு பாஜக தலைவர் மிரட்டல்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
தீபாவளி ரஷ்ஷை சமாளிக்க.. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் தமிழக அரசு!
மீன்வளப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்தார்!
{{comments.comment}}